ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி நல்ல ஃபார்மில் இருக்கிறார். 41 வயதான தோனி தற்போது அதிரடியாக விளையாடி வருகிறார். லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி மூன்று பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். அதேபோன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். தோனி களமிறங்கிய இரண்டு இன்னிங்ஸில் மொத்தமாக ஐந்து சிக்ஸரும், ஒரு பவுண்டரியும் அடித்திருக்கிறார்.

Advertisement

தோனி இவ்வளவு சிறப்பாக விளையாடி வரும் நிலையில் அவர் ஏன் தொடர்ந்து கீழ் வரிசையில் களமிறங்குகிறார் என்ற கேள்வி எழுந்தது. நேற்றைய ஆட்டத்தில் கூட சிஎஸ்கே அணியின் நடுவரிசை வீரர்கள் தடுமாறியபோதும் தோனி 8ஆவது வீரராக தான் களமிறங்கினார். அதற்கு காரணம் தற்போது தெரியவந்துள்ளது. தோனிக்கு வயதாகிவிட்டது என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. இதனால் தோனிக்கு காலில் ஏற்கனவே பிரச்சனை இருந்து வருகிறது. இதன் காரணமாக அவரால் முன்பு போல் வேகமாக ரன்கள் ஓட முடியவில்லை. இதன் காரணமாக நடுவரிசையில் விளையாட நேர்ந்தால் ஓடோடி ரன்கள் எடுக்க வேண்டும்.

Advertisement

இதுவே பழைய தோனி என்றால் ஒவ்வொரு பந்துக்கும் இரண்டு ரன்கள் ஓடி அசால்டாக செய்வார். தற்போது காலில் காயம் இருப்பதால் நடுவரிசையில் களம் இறங்கி ரன்கள் ஓட முடியாது என்ற காரணத்தினால் மட்டுமே நோனி கடைசியில் விளையாடுகிறார். ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கூட தோனி ரன்கள் ஓடும்போது அவருடைய வேகம் குறைவாக இருந்ததாக கிரிக்கெட் வர்ணனையாளர்கள் ரவி சாஸ்திரியும் , ஹைடனும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பேசிய ரவி சாஸ்திரி, தோனியின் காலில் நிச்சயம் ஏதோ பிரச்சனை இருக்கிறது. இல்லையென்றால் அவர் இரண்டு ரன்களை ஓடி இருப்பார் என்று கூறினார் . தோனியின் காயத்தின் தன்மை இதுகுறித்து வெளியிடப்படவில்லை. காயத்தின் தன்மை குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகமும் தோனியும் இதுவரை வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை. இதனால் தோனி சில போட்டிகளில் ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில், “ஆம், தோனிக்கு இடது காலில் சில அசவுகரியங்கள் இருக்கிறது. அதற்கு என்று தனி சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றவாறு எப்படி கால் அசைவுகள் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து விளையாடுகிறார். அவர் தலைசிறந்த வீரர் மற்றும் சிறந்த உடல் தகுதி கொண்டவர். நன்றாக குணமடைந்து வருகிறார். அவரின் முக்கியத்துவம் எங்களுக்கு புரியும். ரசிகர்களின் எதிர்பார்ப்பை கண்டிப்பாக பூர்த்தி செய்வார். அடுத்த போட்டியில் விளையாடுவாரா?மாட்டாரா? என்பதை போட்டிக்கு முன்பு அணி நிர்வாகம் மற்றும் அவரே தனிப்பட்ட முறையில் முடிவுகள் எடுப்பார்.” என்றார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News