இந்த சீசன் எங்களுக்கு சொந்தம் மைதானம் சாதகமாக அமையவில்லை - நிதிஷ் ரானா!

Updated: Mon, May 15 2023 12:28 IST
IPL 2023: Nitish Rana credits his spinners after KKR’s six-wicket win over CSK at Chepauk! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 61ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை, முதலில் பேட்டிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் சோ்த்தது. 

இதையடுத்து விளையாடிய கேகேஆர் அணி நிதிஷ் ரானா, ரிங்கு சிங் ஆகியோரது அரைசதத்தின் மூலம் 18.3 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 147 ரன்கள் எடுத்து வென்றது. இந்தத் தோல்வியால், பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யாமல் அதை நெருங்கிய நிலையிலேயே நிற்கிறது சென்னை. மறுபுறம் கொல்கத்தாவும் முழுமையாக போட்டியிலிருந்து வெளியேறாத நிலையில் இருக்கிறது.

இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பேசிய கேகேஆர் அணியின் கேப்டன் நிதிஷ் ரானா, “டாஸ் போடும்போது கூறினேன். இன்றைய தினம் நாங்கள் பேட்டிங் பௌலிங் மற்றும் பேர்ல்டிங் மூன்றிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே சிஎஸ்கே போன்ற அணியை வீழ்த்த முடியும் என்றேன். அதற்கேற்றார் போல இன்று மிகச்சிறப்பாக செயல்பட்டார்கள்.

சேப்பாக்கம் பிட்ச் எனக்கு பதட்டத்தை கொடுத்தது. பிட்ச்சில் ரோலர் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. விரிசல் விழுந்துவிடுமோ என நினைத்தேன். என்னால் சரியாக விளையாட முடியாதோ என்று சந்தேகத்துடன் இருந்தேன். பயிற்சியாளர் சந்திரகாந்த் எனக்கு சில அறிவுரைகளை கூறி, என்னுடைய பேட்டிங் ஸ்டைலுக்கு இந்த பிட்ச் சரியாக இருக்கும் என்றார். அதை உணர்ந்து நிதானமாக விளையாடினேன்.

கடைசி ஓவர் வரை விரிசல் வருமோ எனும் பதட்டம் இருந்தது. அதிர்ஷ்டவசமாக நடக்கவில்லை. ஒட்டுமொத்தமாக நாங்கள் செயல்பட்ட விதம் மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. இந்த சீசன் எங்களுக்கு சொந்தம் மைதானம் சாதகமாக அமையவில்லை. இது போன்று வெளிமைதானங்களில் பெற்ற வெற்றி தான் பக்கபலமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை