சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர், ரவிச்சந்திரன் அஸ்வின் தேவ்தத் படிக்கல் ஆகிய மூவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக 20 ஓவர்களில் 175 ரன்கள் அடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 176 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டேவான் கான்வே 50 ரன்கள் மற்றும் ரஹானே 31 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர். 

Advertisement

மொயின், தூபெ, ராயுடு மூவரும் ஒற்றை இலக்க ரன்களுக்கு வெளியேற, சிஎஸ்கே அணி இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டது. 18 பந்துகளில் 54 ரன்கள் தேவை என இருந்தபோது, களத்தில் இருந்த தோனி மற்றும் ஜடேஜா ஜோடி 2 ஓவர்களில் 33 ரன்கள் சேர்த்தனர். 20ஆவது ஓவரில் 21 ரன்கள் தேவைபட்டது. சந்தீப் சர்மா வீசினார். தோனி பேட்டிங்கில் இருந்ததால், அழுத்தத்தில் முதல் இரண்டு பந்துகளை ஒயிடாக வீசினார். அடுத்த பந்தை சுதாரித்து யார்க்கர் வீச, தோனியால் அடிக்க முடியவில்லை. அடுத்த இரண்டு பந்துகளில் 2 சிக்ஸர் அடித்து மிரளவிட்டார் தோனி.

Advertisement

பின்னர் கடைசி பந்தில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டபோது, பேட்டிங்கில் தோனி இருந்தார். இதுபோன்று இருந்த பல போட்டிகளில் சிக்ஸ் அடித்து வெற்றியும் பெற்றுதந்துள்ளார். ஆகையால் சந்தீப் சர்மா கூடுதல் அழுத்தத்துடன் காணப்பட்டார். கடைசி பந்தில் துல்லியமாக யார்க்கர் வீசி திணறக்க, சிஎஸ்கே அணியால் 1 ரன் மட்டுமே அடிக்க முடிந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தோனியை கட்டுப்படுத்தி வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சந்தீப் சர்மாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஜியோ சினிமா செயலி இந்த வருடத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓடிடி தளம் ஒளிபரப்பை செய்துவருகிறது. முதல் போட்டியில் இருந்தே நேரலை பார்வையாளர்கள் எண்ணிக்கை கோடிகளில் இருந்து வருகிறது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் தோனி பேட்டிங் செய்துவந்தபோது, சுமார் 2.2 கோடி பேர் நேரலையில் பார்த்துவந்தனர். ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியை அதிக பார்வையாளர்கள் இணைய நேரலையில் பார்த்தது என்கிற சாதனையை படைத்துள்ளது.

ஜியோ சினிமா செயலியில் அதிக நேரலை பார்வையாளர்கள் பார்த்த போட்டிகள் 

  • சென்னை-ராஜஸ்தான் – 2.2 கோடி
  • பெங்களூர்-லக்னோ – 1.8 கோடி
  • டெல்லி-மும்பை – 1.7 கோடி
  • சென்னை-லக்னோ – 1.7 கோடி
  • குஜராத்-சென்னை – 1.6 கோடி

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News