சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ஆறாவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொண்டது. இப்போட்டியில் தோனி டாஸ் வென்று பவுலிங் எடுத்தார். ஹைதராபாத் அணிக்கு துவக்க வீரர்களாக இம்முறை ஹாரி புரூக் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் களம் இறங்கினர். நல்ல பார்மில் இருந்த ஹாரி புரூக் 18 ரன்களுக்கு அவுட் ஆனார். அபிஷேக் ஷர்மா 34 ரன்கள் மற்றும் திரிப்பாதி 21 ரன்கள் அடித்து இருவரும் ஜடேஜாவின் பந்தில் ஆட்டம் இழந்தனர்.

Advertisement

மயங்க் அகர்வால், உள்ளே வந்தவுடன் இரண்டு ரன்கள் தோனியிடம் ஸ்டம்பிங் அவுட் ஆனார். கடைசியில் க்ளாசன் மற்றும் மார்கோ யான்சன் இருவரும் தலா 17 ரன்கள் அடித்திருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் எட்டியது ஹைதராபாத் அணி. இந்த இலக்கை சேஸ் செய்ய களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ருத்துராஜ் மற்றும் டெவான் கான்வெ இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து முதல் விக்கெட்டிற்கு 87 ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்ஸ்மேன்களுக்கு வேலையை எளிதாக்கினார்கள்.

Advertisement

ருத்துராஜ் 35 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, மறுபக்கம் கடைசிவரை அவுட் ஆகாமல் இருந்த டெவான் கான்வே 57 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸ் உட்பட 77 ரன்கள் அடித்திருந்தார். சிஎஸ்கே அணி மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 18.4 ஓவர்களில் 138 அடித்தது. 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.

பந்துவீச்சில் பட்டையை கிளப்பிய ரவீந்திர ஜடேஜா இப்போட்டியின் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அப்போது ஜடேஜா அளித்த பேட்டியில், “சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வருவது தனி மகிழ்ச்சி மற்றும் இந்த விக்கெட்டிற்கு பந்துவீசுவது மிகவும் பிடித்த விஷயமாக மாறிவிட்டது. இந்த பிட்ச் எப்படி நடந்து கொள்ளும், எந்த இடத்தில் டர்ன் ஆகும் என்பதையும் நன்றாக புரிந்து கொண்டேன். அதற்கேற்றவாறு பௌலிங் செய்தேன்.

இங்கு என்ன செய்யக்கூடாது என்பதையும் நன்கு அறிவேன். ஸ்டம்ப்பை விட்டு நகராமல் பந்துவீசினால் பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள். அதை வைத்து தாக்கம் ஏற்படுத்தலாம். மேலும் சிஎஸ்கே ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு அளப்பரியது. வெற்றியோ தோல்வியோ அவர்களது ஆதரவில் எந்தவித மாற்றமும் இருக்காது” என்று தெரிவித்தார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News