ஐபிஎல் 2023: பெங்களூருவில் வெளுத்து வாங்கும் மழை; சோகத்தில் ஆர்சிபி!

Updated: Sun, May 21 2023 16:36 IST
IPL 2023: Will rain affect Royal Challengers Bangalore Playoffs qualification? (Image Source: Google)

16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் தங்களுக்கான 'பிளே-ஆஃப்' சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளன. இந்நிலையில் மீதமுள்ள ஒரு இடத்திற்கு மூன்று அணிகளுக்கு இடையேயா கடும் போட்டி நிலவி வருகிறது. 

அந்தவகையில் இன்று நடைபெறும் 70ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்ளூரு அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடுகிறது. இப்போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்யும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்போட்டியில் ஆர்சிபி அணி வென்றால் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் அந்த அணி வீரர்கள் தீவிரமாக உள்ளனர். இந்நிலையில், மைதானம் அமைந்துள்ள பகுதிகளில் மழை பெய்து வருவதால் பெங்களூருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையேயான ஆட்டம் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆட்டம் தடை பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை