ஐபிஎல் 2024: ராஜஸ்தான் பேட்டர்கள் தடுமாற்றம்; சிஎஸ்கே அணிக்கு 142 ரன்கள் டார்கெட்!

Updated: Sun, May 12 2024 17:15 IST
Image Source: Google

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 61ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். 

தொடக்கம் முதலே இருவரும் பந்துகளை எதிர்கொள்ள தடுமாறினாலும், அவ்வபோது பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் அதிரடியாக விளையாட முயற்சித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்கள் எடுத்த நிலையில் சிமர்ஜீத் சிங் பந்துவீச்சில் விக்கெடை இழந்தார். அவரைத்தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஸ் பட்லரும் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சிமர்ஜித்தின் அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார். 

இதனையடுத்து இணைந்த கேப்டன் சஞ்சு சாம்சன் - ரியான் பராக் இணையும் நிதானமாக விளையாடி சிறுக சிறுக ரன்களைச் சேர்த்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களை மட்டுமே எதிருந்த நிலையில் சிமர்ஜித் சிங்கின் மூன்றாவது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த துருவ் ஜூரெல் களமிறங்கியது முதலே அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். அவருக்கு துணையாக ரியான் பராக்கும் ஒருசில பவுண்டரிகளை அடித்தார். 

இறுதியில் அதிரடியாக விளையாடி வந்த துருவு ஜூரெலும் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 28 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஷுபம் தூபேவும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரியான் பராக் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 47 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களை மட்டுமே சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் சிமர்ஜீத் சிங் 3 விக்கெட்டுகளையும், துஷார் தேஷ் பாண்டே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை