Advertisement

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாட்டின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அந்தவகையில் நாளை நடைபெறும் 21ஆவது லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகின்றன.

Advertisement

இதில் இரு அணிகளும் நடப்பு ஐபிஎல் தொடரில் தலா 2 வெற்றிகளைப் பெற்றுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று 3ஆவது வெற்றியைப் பதிவுசெய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  அந்தவகையில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதல் போட்டியில் தோல்வியைத் தழுவினாலும், அடுத்தடுத்த போட்டிகளில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

இதனால் தங்களது மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்யும் முனைப்புடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மோஹ்சின் கான் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆர்சிபி அணிக்கெதிரான போட்டிக்கு முன்னதாக அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும், தற்போது அவர் காயத்திலிருந்து மீண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளனர். 

இந்நிலையில் இதுகுறித்து பேசிய லக்னோ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான போட்டிக்கு முன்னதாக எங்கள் வேகப்பந்து வீச்சாளர் மோஹ்சின் கான் முதுகுபிடிப்பால் அவதிப்பட்டார். இதுகுறித்து அவர் எங்களிடம் தெரிவித்ததுடன், பயிற்சி ஈடுபடுவதில் அசௌகரியம் இருப்பதாக கூறினார். அவர் பார்ப்பதற்கு உடற்தகுதியுடன் தெரிந்தாலும், நாங்கள் அவருக்கான உதற்தகுதி சோதனையை செய்யவுள்ளோம்.

அந்த சோதனையின் முடிவுகளைப் பொறுத்தே அவரை பிளேயிங் லெவனில் தேர்வு செய்யலாமா என்பது குறித்து முடிவெடுக்க உள்ளோம். மொஹ்சின் கான் எங்கள் அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் மற்றும் நடப்பு ஐபிஎல் தொடரிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதனால் அவர் மீது நாங்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் விளையாடிய மோஹ்சின் கான், அப்போட்டியில்  4 ஓவர்களை வீசி 32 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றார். தற்போதுள்ள அணியில் மயங்க் யாதவ், நவீன் உல் ஹக் போன்ற வீரர்கள் இருந்தாலும் மொஹ்சின் கான் விளையாடாதது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News