இந்தியர்கள் மற்ற அணிகளின் தோல்வியை கொண்டாடுவதில்லை - இர்ஃபான் பதான் பதிலடி!

Updated: Sun, Nov 13 2022 14:44 IST
Irfan Pathan hits back at Pakistan PM for his cheeky tweet on Team India (Image Source: Google)

டி20 உலக கோப்பை அரை இறுதியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்திடம் மிகவும் மோசமாக தோற்றது. அலெக்ஸ் ஹால்ஸ், பட்லர் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

இங்கிலாந்து அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் படுதோல்வியை சந்தித்ததால் இந்திய அணியை முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த தோல்வி இந்திய ரசிகர்களை மிகுந்த ஏமாற்றம் அடைய வைத்தது. இதற்கிடையே இந்திய அணியின் அரை இறுதி தோல்வியை கிண்டல் செய்யும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

அவர் தனது டுவிட்டர் பதிவில், 'எனவே இந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் டி20 உலக கோப்பை இறுதி போட்டி யில் 152/0 vs 170/0 என பதிவிட்டு இருந்தார். கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்த உலக கோப்பை அரை இறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இரு அணிகளும் (பாகிஸ்தான், இங்கிலாந்து) இறுதி போட்டியில் மோதுவதை பாகிஸ்தான் பிரதமர் கிண்டலுடன் தெரிவித்து இருந்தார். பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் இந்த டுவிட்டர் பதிவுக்கு முன்னாள் ஆல்ரவுண்டரும், வர்ணனையாளருமான இர்அபான் பதான் பதிலடி கொடுத்துள்ளார். பாகிஸ்தானைபோல இந்தியர்கள் மற்ற அணிகளின் தோல்வியை கொண்டாடுவதில்லை என்று அவர் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக இர்ஃபான் பதான் தனது டுவிட்டர் பதிவில், “இதுதான் உங்களுக்கும், எங்களுக்கும் உள்ள வித்தியாசம். நாங்கள் எங்களது நிலையில் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஆனால் நீங்களோ மற்றவர்கள் கஷ்டத்தில் இருக்கும்போது மகிழ்ச்சியை தேடுகிறீர்கள். அதனால் தான் நீங்கள் உங்கள் நாட்டின் நலனில் கவனம் செலுத்தவில்லை” என தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை