இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் (பிப்.6) ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் தொடங்கவுள்ளது. இதற்காக தயாராகி வந்த இந்திய அணியில் தற்போது கரோனாவால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

Advertisement

அகமதாபாத்தில் உள்ள இந்திய அணியில் ஷிகர் தவான், ருதுராஜ் கெயிக்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், நவ்தீப் சைனி, அக்‌ஷர் பட்டேல் என 5 வீரர்கள் உட்பட 8 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. ஓப்பனிங் வீரர்கள் 2 பேருக்கு கரோனா உறுதியானதால், முதல் போட்டியில் இந்திய அணியின் ஓப்பனிங்கிற்கு சிக்கல் உண்டானது. துணைக்கேப்டன் கே.எல்.ராகுலும் தனது தங்கையின் திருமணத்திற்காக சென்றுள்ளார்.

Advertisement

இதனையடுத்து ஓப்பனராக மயங்க் அகர்வால் அணிக்குள் சேர்க்கப்பட்டு, தற்போது தனிமைப்படுத்துதலில் உள்ளார். இந்நிலையில் கூடுதலாக இளம் வீரர் இஷான் கிஷான் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார். டி20 தொடருக்காக ஏற்கனவே இருக்கும் இஷான், ஒருநாள் அணிக்குள்ளும் இணைக்கப்பட்டுள்ளார். 

வெளியில் இருந்து அணிக்குள் சேர்க்கப்பட்ட மயங்க் அகர்வால், தற்போது கட்டாய 3 நாள் தனிமைப்படுத்துதளில் உள்ளார். அவரது தனிமைப்படுத்துதல் காலம் சரியாக போட்டி நாளான பிப்ரவரி 6ஆம் தேதியன்று தான் முடிவடைகிறது. எனவே அவரின் உடற்தகுதி அன்று எப்படி இருக்கும் என தெரியாது என்பதால் டி20 அணியில் இருந்து இஷான் கிஷானை சேர்த்துள்ளனர். 

இந்த திட்டத்தை கேப்டன் ரோகித் சர்மா தான் பிசிசிஐயிடம் கேட்டு பெற்றதாக தெரிகிறது. ஏனென்றால் ரோகித் - இஷான் ஜோடி ஏற்கனவே ஐபிஎல்-ல் ஓப்பனிங் இறங்கிய அனுபவம் உள்ளது. இதனால் அவர் தற்போது மற்ற அணி வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இளம் வீரரான இஷான் கிஷான் ஏற்கனவே 2 முறை இந்திய ஒருநாள் அணிக்காக விளையாடியுள்ளார். இலங்கைக்கு எதிரான தனது அறிமுக போட்டியில் 42 பந்துகளில் 59 ரன்கள் விளாசி அசத்தினார். இதனால் அவரை ஓப்பனிங்கிற்கு பயன்படுத்த எந்தவித தயக்கமும் இன்றி டிராவிட் இருப்பதாக தெரிகிறது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News