இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி நேற்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டின் 3ஆவது நாளில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை மொத்தம் 55 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 200 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். 

Advertisement

மேலும் இந்த 200 விக்கெட்டுக்களை அவர் குறைந்த பந்துகளில் எடுத்த முதல் இந்திய பவுலர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். அவரது இந்த சாதனைக்காக தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியது மட்டுமின்றி தான் இன்று ஒரு கிரிக்கெட் வீரராக நிற்பதற்கும் யார் காரணம் என்கிற நெகிழ்ச்சியான ஒரு தகவலை ஷமி நேற்றைய போட்டி முடிந்த பின்பு பகிர்ந்து கொண்டார்.

Advertisement

இதுகுறித்து பேசிய அவர், “நான் இன்று இருக்கும் நிலைமைக்கு என் அப்பாதான் காரணம். எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத ஒரு கிராமத்தில் இருந்து வந்தவன் நான். இன்றளவும் எங்களது கிராமத்தில் வசதிகள் முன்னேறவில்லை. அந்த சூழலிலும் என்னை 30 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்துச் சென்று பயிற்சி அளித்தவர் என் தந்தை.

அந்தக் கடினமான நாட்களை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். அப்படி கடுமையான பயிற்சியை மேற்கொண்ட நான் இன்று இவ்வளவு பெரிய வீரராக நிற்க எனது தந்தை மட்டுமே காரணம் அவருக்காக இந்த சாதனையை நான் அர்பணிக்கிறேன்” என்று உருக்கமாக பேசியிருந்தார். 

ஷமியின் தந்தை கடந்த 2017 ஆம் ஆண்டு ஹார்ட் அட்டேக் மூலம் இறந்தது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட்டில் கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து விளையாடி வரும் முகமது ஷமி 13 ஆவது இந்திய பவுலராக 200 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதோடு ஐந்தாவது வேகப்பந்து வீச்சாளராக இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News