எல்லா போட்டிகளிலும் நான் தான் விளையாட வேண்டுமா என்ன? பாபர் ஆசாம்!

Updated: Thu, Nov 25 2021 19:29 IST
It’s Not Written That I Will Be Scoring Runs Every Time: Babar Azam (Image Source: Google)

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக மதிப்பிடப்படும் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோருடன் பாபர் ஆசாமும் சேர்க்கப்பட்டுள்ளார். 27 வயதான பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம், டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 விதமான போட்டிகளிலும் அபாரமாக விளையாடி ரன்களை குவித்துவருகிறார். ஒருசிலர் அவரை விராட் கோலியை விட சிறந்த வீரராக மதிப்பிடுகின்றனர்.

எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், இடையிடையே ஒருசில போட்டிகளில் தொடர்ச்சியாக சரியாக ஆடாததும், ஃபார்மில் இல்லாமல் இருப்பதும் இயல்பே. அது எப்பேர்ப்பட்ட பேட்ஸ்மேனுக்கும் நடக்கும். விராட் கோலியே கடந்த 2 ஆண்டுகளாக பெரிதாக ஸ்கோர் செய்யமுடியாமல் திணறிவருகிறார்.

இந்நிலையில், அந்தவகையில் பாபர் ஆசாம் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் சொதப்பலாக பேட்டிங் ஆடினார். டி20 உலக கோப்பை தொடரில் 303 ரன்களை குவித்த பாபர் ஆசாம் தான், அந்த தொடரில் அதிக ரன்களை குவித்த வீரராக திகழ்ந்தார்.

டி20 உலக கோப்பையில் அதிக ரன்களை குவித்துவிட்டு, வங்கதேசத்துக்கு சென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம், அந்த எதிரான 3 டி20 போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாகவே 27 ரன்கள் மட்டுமே அடித்தார். 3 டி20 போட்டிகளில் முறையே 7, 1, 19 ரன்கள் மட்டுமே அடித்தார்.

பாபர் அசாம் சரியாக ஆடவில்லை என்றாலும், வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து டி20 தொடரை 3-0 என பாகிஸ்தான் அணி வென்றது.

டி20 தொடர் முடிவடைந்த நிலையில், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நாளை(26) தொடங்குகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பாபர் ஆசாமிடம், அவரது ஃபார்ம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பாபர் ஆசாம், “ஒவ்வொரு முறையும் நான் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்று எதிலும் எழுதப்படவில்லை. அணியில் இருக்கும் மற்ற வீரர்களும் பொறுப்புடன் ஆடுகிறார்கள். அதனால் தான் டி20 தொடரை வென்றோம். டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் முனைப்பில் இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை