இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது முதல் இன்னிங்ஸில் 393 ரன்கள் அடித்திருந்தது. எட்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த நிலையில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டிக்ளர் செய்கிறேன் என அறிவித்தார். அதன் பிறகு பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்கில் 386 அடித்து ஆல் அவுட் ஆனது.

Advertisement

இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி சற்று தடுமாற்றத்துடன் விளையாடி 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மொத்தம் 280 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. 281 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணி நான்காம் நாள் முடிவில் மூன்று முக்கியமான விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது.

Advertisement

போட்டியின் கடைசி நாளில் முதல் செஷன் மழை காரணமாக முற்றிலும் கைவிடபட்டுவிட்டது. மீதம் இருக்கும் நேரத்தில் மொத்தம் 67 ஓவர்கள் மட்டுமே வீசப்படும் என நடுவர்கள் அறிவித்திருந்தனர். அதற்குள் 174 ரன்களை ஆஸ்திரேலிய அணி அடிக்க வேண்டும். இங்கிலாந்து அணி வெற்றிபெற ஏழு விக்கெட் கைப்பற்ற வேண்டும் என இருந்தது.

மொத்தம் 8 விக்கெட்டுகளை இங்கிலாந்து அணி கைப்பற்றிவிட்டது. கடைசி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டியது இருந்தது. ஆஸ்திரேலியா அணி 54 ரன்கள் அடிக்க வேண்டியது இருந்தது. கேப்டன் கம்மின்ஸ் கடைசிவரை உள்ளே நின்று அவர் மட்டுமே 44 ரன்கள் அடித்து வெற்றியை உறுதி செய்தார். இவருக்கு பக்கபலமாக நேதன் லையன் இருந்தார். இறுதியாக ஆஸ்திரேலியா இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இத்தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், “போட்டியை கடைசி வரை எடுத்து சென்று போராடியதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். மற்றுமொரு தலைசிறந்த டெஸ்ட் போட்டியில் ஒரு அங்கமாக இருந்திருக்கிறோம். இந்த போட்டியில் ரசிகர்கள் சீட்டின் நுனிக்கு வந்து பரபரப்பாக என்ன நடக்கும்? என்று ரசிக்கவில்லை என்றால் மட்டுமே நான் ஆச்சரியமாக உணர்வேன். 

அப்படி ஒரு கிரிக்கெட்டை இந்த ஐந்து நாட்களும் வெளிப்படுத்தினோம். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ரசிகர்கள் அனைவரும் தவறாமல் ஆசஸ் டெஸ்ட் தொடரை கண்டுகளிக்க இதுவொரு காரணமாகும். தோல்வி என்பது தோல்விதான். ஆனாலும் தொடர்ந்து இதேபோல அணுகுமுறையை மட்டுமே வெளிப்படுத்துவோம். தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு அழுத்தம் கொடுப்பதை மாற்றிக்கொள்ள மாட்டோம். அந்த குறிப்பிட்ட சூழலில் என்ன முடிவுகளை எடுக்க வேண்டுமோ, அதற்கு ஏற்றவாறு சரி என்று படும் முடிவுகளை எடுப்போம்.

Advertisement

முதல் இன்னிங்சில் டிக்ளேர் செய்ததை நினைத்து எனக்கு துளியும் வருத்தம் இல்லை. ஆண்டர்சன் களத்தில் இறங்கி 20 நிமிடம் பேட்டிங் செய்வது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆகையால் ஆஸ்திரலியா மீது அழுத்தம் கொடுத்து சான்ஸ் எடுக்கலாம் என நினைத்தேன். ரூட் மற்றும் ஆண்டர்சன் இருவரும் விரைவாக ஆட்டமிழந்திருக்கவும் வாய்ப்புள்ளதே. யார் அறிவர்?. ஆகையால் நாங்கள் எடுத்த முடிவில் எந்தவித வருத்தமும் எங்களுக்கு இல்லை.

நேற்று நான்காம் நாளில் பேட்டிங் மற்றும் இன்று கடைசி நாளில் பவுலிங் என ஜோ ரூட் இந்த போட்டி முழுவதுமே மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலியா அணிக்கு பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும். போட்டி முழுவதும் தங்களது திட்டத்தில் இருந்து மாற்றாமல் பிடித்தமாக ஒரே நோக்கத்தில் இருந்தார்கள். நேற்றைய தினம் இரண்டாம் பாதியில் மற்றும் இன்று முழுவதும் ராபின்சன் மற்றும் பிராட் இருவரும் நன்றாக அழுத்தம் கொடுத்தார்கள். கடைசி வரை நாங்கள் போராடிய நினைத்து பெருமை கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News