அணிக்கு பங்களிப்பு செய்ததில் மிகவும் மகிழ்ச்சி - கேன் வில்லியம்சன்!

Updated: Fri, Oct 13 2023 22:42 IST
Image Source: Google

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை செப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் வங்கதேசம் - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

நியூசிலாந்து அணிக்கு இந்த உலகக் கோப்பையில் இது தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியாகும். நல்ல ரன் ரேட் உடன் 6 புள்ளிகள் பெற்று தற்பொழுது நியூசிலாந்து அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்து இதே மைதானத்தில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது. இந்தப் போட்டிக்கு நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் திரும்ப வந்தார். 

நியூசிலாந்து அணிக்கு திரும்ப வந்த ஸ்கேன் வில்லியம்சன் பேட்டிங்கில் 78 ரன்கள் எடுத்து மிகச் சிறப்பான பங்களிப்பை கொடுத்த நிலையில் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் பெவிலியனுக்கு திரும்பினார். மேற்கொண்டு களத்தில் நின்ற டேரில் மிட்சல் அதிரடியாக 67 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்து அசத்தினார். 

இந்நிலையில் வெற்றிக்கு பின் பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், “காலில் ஏற்பட்ட காயம் பரவாயில்ல. தற்பொழுது கையில் ஏற்பட்டிருக்கிறது. நாளை என்ன நிலைமை என்று உடனடியாக ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும். முதல் பாதியில் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி ஆட்டத்தை ஆழமாக எடுத்துச் செல்வது நன்றாக இருந்தது. பவர் பிளேவுக்கு அடுத்து நாங்கள் ரன்களை குறைக்க பந்து வீசலாம் என்று நினைத்தோம். 

இது நல்ல போட்டியளிக்க கூடிய விக்கெட். உண்மையில் இது நல்ல செயல்திறன். லோக்கி ஃபர்குசன் சிறப்பாக பந்துவீசினார். வேகப் பந்துவீச்சாளர்கள் மிகவும் திறமையாக செயல்பட்டார்கள். அணி உடன் இருப்பது மற்றும் பார்ட்னர்ஷிப்பில் ஒரு பங்குடன் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது நல்ல குழு செயல் திறன். மிட்சல் எப்பொழுதும் அணிக்காக இருக்கக்கூடிய வீரர். அவர் விளையாடுவதை பார்ப்பதற்கு எப்பொழுதும் அருமையாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை