“ஐபிஎல் தொடரில் நான் இருக்க விரும்பும் ஒரே இடம் கேகேஆர் மட்டுமே” - சுனில் நரைன்

Updated: Wed, Dec 01 2021 21:59 IST
KKR is only place I want to be in IPL cricket, says Sunil Narine (Image Source: Google)

ஐபிஎல் 2022 சீசனில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவிக்க நேற்று கடைசி நாள் என்பதால் வீரர்கள் தக்கவைப்பு பட்டியலை வெளியிட்டன.

இதில் கொல்கத்தாவை மையமாகக் கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸ்ஸல், வருண் சக்ரவர்த்தி ஆகியோரை தக்கவைப்பதாக அறிவித்தது. 

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் நாண் விளையாட வேண்டும் என்று நினைக்கும் ஒரே அணி கேகேஆர் மட்டும் தான் என வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் சுனில் நரைன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய நரைன், “நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். தற்போது ஐபிஎல் தொடரில் நான் இருக்க விரும்பும் ஒரே இடம் இதுதான். மேலும் கேகேஆர், டிகேஆர் அல்லது இந்த உரிமையாளர்கள் வைத்திருக்கும் வேறு எந்த அணியாக இருந்தாலும் அவர்களுக்காக விளையாட விரும்புகிறேன்.

ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளாக நான் கேகேஆர் அணிக்காக விளையாடி வருகின்றேன். அதனால் நான் கேகேஆருக்கு விசுவாசமாக இருக்க விரும்புகிறேன். மேலும் அடுத்த ஆண்டு மீண்டும் ஈடன் கார்டனில் விளையாட காத்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை