வரும் ஜூன் 9ஆம் தேதி இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான டி20 போட்டிகள் தொடங்குகின்றன. இந்நிலையில், இந்தப் போட்டியில் பங்கேற்கும் 18 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது.

Advertisement

அதன்படி, இந்தத் தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால், அணியின் தற்காலிக கேப்டனாக கே.எல்.ராகுலும், துணை கேப்டனாக ரிஷப் பந்தும் செய்லபாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

மேலும் ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், சாஹல், குல்தீப் யாதவ், ரவி பிஸ்னோய், அக்சர் பட்டேல், புவனேஸ்வர்குமார், ஹர்சல் பட்டேல், அவேஷ் கான், ஆர்ஸ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகியோருக்கு இடமளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்கள் சிலர் முதல்முறையாக இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்கள் உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங் இந்தியாவுக்காக இந்த தொடரில் அறிமுக வீரர்களாக ஆடும் லெவனில் இடம் பெற வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 361 ரன்களை எடுத்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் நிதிஷ் ராணாவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அணியில் சேர்க்கப்படாததால் ஏமாற்றமடைந்துள்ள அவர், 'விரைவில் மாற்றம் நிகழும்' என தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

28 வயதான நிதிஷ் ராணா கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். ஆடிய 3 ஆட்டங்களிலும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.  

Advertisement

அந்த சமயத்தில் நிதிஷ் ராணா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''சமூக ஊடகங்கள் வெற்றிகளை வெளியிடுவது மட்டுமல்ல, எங்கள் தோல்விகளையும் வெளியிடுகின்றன. இந்த சுற்றுப்பயணம் நான் திட்டமிட்டபடி அல்லது எதிர்பார்த்தபடி நடக்கவில்லை, ஆனால் எனது கடைசி 3 ஆட்டங்களில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். 

பேட்டை என் கைகளில் பிடித்த காலத்திலிருந்தே, அதிர்ஷ்டத்தை விட கடின உழைப்பை மட்டுமே நம்பினேன். எநான் தொடர்ந்து முன்னேறுவேன். நான் வலுவாக வளர்ந்து கொண்டே இருப்பேன், எனக்கும் எனது அணிக்கும் பெரிய வெற்றியைத் தேடித் தருவேன்" என்று ராணா கூறியிருந்தது தற்போது பகிரப்பட்டு வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News