ஸ்ரேயாஸ், ராகுலுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கக் கூடாது - டேனிஷ் கனேரியா!

Updated: Wed, Aug 16 2023 16:31 IST
Image Source: Google

பயிற்சியை துவங்கி விட்டார்கள் என்பதற்காக மட்டுமே இவர்களை இந்திய அணியில் சேர்க்க கூடாது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனரியா தெரிவித்துள்ளார்.

ஐசிசி நடத்தும் 13ஆவது உலகக் கோப்பை தொடர் இந்தாண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த முறை உலககோப்பையை இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்து நடத்துகிறது. இதனால் ஒவ்வொரு அணியும் எப்படியாவது இந்த முறை உலக கோப்பையை வென்று விட வேண்டும் என்று கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருவதோடு , இருதரப்பு தொடர்களில் அதிகமாக பங்கேற்று அணியை செட் செய்வதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

ஆனால் தற்போது இருக்கும் நிலைமையில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மற்றும் பௌலிங் லைன்-அப் என இரண்டுமே சற்று பரிதாப நிலையில்தான் உள்ளது. ஏனென்றால் ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல்,பும்ரா, மற்றும் ரிஷப் பண்ட் உள்ளிட்ட இந்திய அணி முக்கியமான வீரர்கள் காயம் காரணமாக ஓய்வில் இருப்பதால் இவர்கள் உலகக் கோப்பை தொடரில் இடம் பெறுவார்களா..? மாட்டார்களா..?என்ற குழப்பம் இந்திய வட்டத்தில் பரவலாக உள்ளது.

ஆனால் பிசிசிஐயின் நெருங்கிய வட்டாரங்கள் பலரும் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல் ராகுல் ஆகிய இருவரும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தற்போது பயிற்சியை தொடங்கி விட்டார்கள் என்றும் அவர்கள் இனிவரும் முக்கியமான தொடர்களில் இந்திய அணியில் இடம் பெறுவார்கள் எனவும் தெரிவித்து வருவதால் இந்த இரண்டு வீரர்கள் குறித்தும் கிரிக்கெட் வட்டத்தில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் குறித்து பல்வேறு விதமான கருத்துக்களை பேசி வரும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனரியா., பயிற்சியை ஆரம்பித்து விட்டார்கள் என்பதற்காக மட்டுமே ஷேர் மட்டும் கே.எல். ராகுலுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கக் கூடாது என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அதில்,“இந்திய அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன்களான கே.எல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் நேஷனல் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.எனவே இவர்கள் இனிவரும் முக்கியமான தொடர்களில் இந்திய அணியில் இடம் பெறுவார்கள். ஆனால் வெறும் பயிற்சியின் அடிப்படையில் மட்டும் வைத்து ஒருவரை அணியில் சேர்ப்பது என்பது சரியான முடிவு கிடையாது,அப்படி செய்யவும் கூடாது. அவர்களை ஒருசில போட்டிகளில் விளையாட வைத்து பார்த்து அவர்கள் சிறந்த பார்மில் இருந்தால் மட்டுமே அவர்களை முக்கியமான தொடர்களில் இந்திய அணியில் சேர்க்க வேண்டும்” என  தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை