கோலி மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்!

Updated: Fri, Jul 02 2021 19:05 IST
Kohli Never Demanded A 3 Test WTC Final, Only Expressed Opinion When Asked: R Ashwin (Image Source: Google)

இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி கோப்பையைத் தட்டிச்சென்றது. எளிதாக டிரா செய்திருக்க வேண்டிய இந்த ஆட்டத்தில் இந்திய அணி படு மோசமாக விளையாடி தோல்வியில் முடிந்தது ரசிகர்களிடையே பெரும் விமர்சனத்தை எழுப்பியது. 

இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடிந்து பேசிய கேப்டன் விராட் கோலி, இறுதிப்போட்டி ஒரு போட்டியாக இல்லாமல் 3 போட்டியாக இருந்திருந்தால் வெற்றியாளரை தேர்ந்தெடுக்க சரியாக இருந்திருக்கும் என்று கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

மேலும் கோலி தோல்வியடைந்த விரக்தியில் தான் இப்படி பேசுகிறார் என்று பலரும் அவரை விமர்சித்து வந்தனர். இந்நிலையில் இந்த கருத்துக்கு பதில் அளித்த இந்திய அணியின் முன்னணி வீரரான அஸ்வின், கோலி கூறியதை பலர் தவறாக புரிந்துகொண்டுள்ளனர். கோலி 3 போட்டிகள் கொண்ட இறுதி ஆட்டம் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கவில்லை என தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அஸ்வின்,“இறுதிப் போட்டி முடிந்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி யாதெனில், இறுதிப்போட்டியில் என்ன வித்தியாசம் செய்திருக்கலாம் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், பைனல் மூன்று போட்டிகளாக இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தான் கூறினார். ஆனால் அவர் மற்றபடி 3 போட்டிகள் கொண்ட தொடர் நடத்தியே ஆக வேண்டும் என்று கோரிக்கை எல்லாம் விடுக்கவில்லை என தெளிவாக எடுத்துரைத்தார்.

இந்த தோல்வியால் ரசிகர்கள் நிச்சயம் ஏமாற்றம் அடைந்து இருப்பார்கள். ஆனால் அடுத்த முறை இதுபோன்று நடக்காது. நிச்சயம் அடுத்து வரும் ஐ.சி.சி தொடரில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி அடைவோம்” என அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை