லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 3ஆவது போட்டியில் இந்தியா மஹாராஜாஸ் - உலக ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நத்தின. இதில் டாஸ் வென்ற உலக ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசியது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இந்திய மஹாராஜாஸ் அணி நமன் ஓஜாவின் அபார சதத்தின் காரணமாக 20 ஓவர்கல் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக நமன் ஓஜா 140 ரன்களைச் சேர்த்தார். 

Advertisement

அதன்பின் கடின இலக்கை துரத்திய உலக ஜெயண்ட்ஸ் அணியில் கெவின் ஓ பிரையன், ஜானதன் ட்ரோட், கோரி ஆண்டர்சன், பிராட் ஹாடின், அல்பி மோர்கல் என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 

மறுமுனையில் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்திருந்த கெவின் பீட்டர்சனும் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய மஹாராஜாஸ் அணியின் வெற்றி உறுதியானது என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 

 

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் இம்ரான் தாஹிர் 19 பந்துகளில் அரைசதம் அடித்து உலக ஜெயண்ட்ஸ் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதில் 5 சிக்சர்கள், 3 பவுண்டரிகளும் அடங்கும்.

Advertisement

இதன்மூலம் உலக ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தியாசத்தில் இந்திய மஹாராஜாஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News