ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்த அணி 12ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி உலக கோப்பையில் விளையாட தகுதி பெற்று இருக்கிறது . ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்ற உலகக்கோப்பை தொகுதி சுற்றுக்கான போட்டியில் காட்லாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்ததோடு 2023 ஆம் ஆண்டிற்கான உலக கோப்பையில் விளையாடவும் தகுதி பெற்றிருக்கிறது .

Advertisement

கடந்த 1996ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்ற உலகக் கோப்பையில் முதல்முறையாக பங்கு பெற்ற நெதர்லாந்து அணி அதன் பிறகு 2003 ,2007 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் தகுதி பெற்றது. அதன்பிறகு 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இரண்டு உலகக் கோப்பைகளை தவறவிட்ட பின்னர் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கு தகுதி பெற்று இருக்கிறது .

Advertisement

இதில் மற்றொரு சிறப்பம்சமாக நெதர்லாந்து அணியின் தந்தை மற்றும் மகன் இருவரும் உலகக்கோப்பை விளையாடியதற்கான பெருமையை பெற இருக்கின்றனர் . நெதர்லாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருபவர் பஸ் டி லீட் . இவரது தந்தையான டிம் டி லீட் நெதர்லாந்து அணிக்காக  இதற்கு முன்பு விளையாடிய நான்கு உலகக்கோப்பை போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து அவரது மகன் பஸ் டி லீட் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாட இருக்கிறார். இவர் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் 52 ரன்களை விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு அதிரடியாக விளையாடி 92 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 123 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். 

இவரது தந்தை டிம் டி லீட் 2003 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 36 ரன்களை விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் விக்கெட்டும் அடங்கும் . அந்தப் போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து தோல்வி அடைந்தாலும் சிறப்பான பந்துவீச்சுக்காக டிம் டி லீட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தந்தை மற்றும் மகன் உலகக்கோப்பை விளையாடுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு ஆறு முறை தந்தை மற்றும் மகன் இருவரும் தங்களது நாட்டிற்காக உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடி இருக்கின்றனர் . இந்திய அணியின் முன்னாள் வீரரான ரோஜர் பின்னி 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார் . அவரது மகன் ஸ்டூவர்ட் பின்னி 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெற்றார் .

Advertisement

ஆஸ்திரேலியா அணியின் ஜெஃப் மார்ஸ் 1987 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்றிருந்தார். அவரது மகன்களான ஷான் மார்ஷ் மற்றும் மிட்சல் மார்ஷ் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் விளையாடினர்.டாம் கரண் மற்றும் சாம் கரன் ஆகியோரின் தந்தையான கெவின் கரன் 1983 மற்றும் 1987 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் ஜிம்பாப்வே அணிக்காக விளையாடினார்.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் தந்தை கிரீஸ் பிராட் 1987 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடினார் . அவரது மகனான ஸ்டுவர்ட் பிராட் 2007, 2011 மற்றும் 2015 உலகக் கோப்பை தொடர்களில் இங்கிலாந்து அணியில் இடம் பெற்று இருந்தார். மேலும் நியூசிலாந்து அணியின் டாம் லேதம் 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை போட்டிகளில் நியூசிலாந்து அணியில் இடம் பெற்று இருந்தார் . அவரது தந்தையான ராட் லேதம் 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பை காண நியூசிலாந்து அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News