எல்பிஎல் 2021: அவிஷ்கா ஃபெர்னாண்டோ சதத்தில் இறுதி போட்டிக்கு முன்னேறியது ஜாஃப்னா கிங்ஸ்!

Updated: Wed, Dec 22 2021 10:53 IST
LPL 2021: Jaffna Kings are through to the finals for the second time in a row (Image Source: Google)

லங்கா பிரீமியர் லீக் டி20 போட்டியில் நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் - தம்புலா ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தம்புலா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கு அவிஷ்கா ஃபெர்னாண்டோ - ரஹ்மனுல்லா குர்பஸ் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். 

பின் 70 ரன்களில் குர்பஸ் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஃபெர்னாண்டோ சதமடித்து அசத்தினார். இதன் மூலம் ஜாஃப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இமாலய இலக்கை துரத்திய தம்புலா ஜெயண்ட்ஸ் அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் 7ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய சமிகா கருணரத்னே அதிரடியாக விளையாடி 75 ரன்களைச் சேர்த்தார். 

ஆனால் மற்ற வீரர்கள் சரிவர சோபிக்காததால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை மட்டுமே எடுத்தது. ஜாஃப்னா அணி தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதன்மூலம் ஜாஃப்னா கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தம்புலா ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை