லங்கா பிரீமியர் லீக்கில் கால்பதிக்கும் பதான்!

Updated: Sat, Jul 03 2021 13:26 IST
LPL2021: Yusuf Pathan available for selection (Image Source: Google)

ஐபிஎல் தொடர்களைப் போலாவே பல நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் டி20 லீக் போட்டிகளை நடத்தி வருகின்றன. அதன்படி கடந்தாண்டு இலங்கை கிரிக்கெட் வாரியமும் லங்கா பிரீமியர் லீக் என்ற டி20 தொடரை அறிமுகம் செய்தது. 

அதன் படி இலங்கையில் நடைபெற்றுவந்த முதல் சீசன் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இத்தொடரின் இரண்டாவது சீசன் வரும் ஜூலை 30ஆம் தேதி முதல் நடத்தப்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

இதனால் ஒவ்வொரு அணியும் வீரர்களைத் தேர்வுசெய்யும் முனைப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் மிக முக்கியமாக இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் யூசுப் பதான் லங்கா பிரீமியர் லீக் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். 

அதேபோல் ஷாகிப் அல் ஹசன், டெம்பா பவுமா, ஜேம்ஸ் ஃபால்க்னர், பென் கட்டிங் ஆகிய சர்வதேச வீரர்களும் நடப்பாண்டு லங்கா பிரீமியர் லீக் தொடரில் விளையாடவுள்ளனர். 

முன்னதாக இந்தியாவைச் சேர்ந்த முனாஃப் படேல், இர்ஃபான் பாதன் ஆகியோர் முதல் சீசன் லங்கா பிரீமியர் லீக் தொடரில் விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை