இந்தியாவுக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து 0-3 என்ற கணக்கில் இழந்த நிலையில், தற்போது 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஏற்கனவே முதல் டி20 போட்டியை கைப்பற்றிய நியூசிலாந்து, 2 ஆவது டி20 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இதன் காரணமாக இரு அணிகளுக்கு இடையிலான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்று சமநிலை பெற்றுள்ளது.

Advertisement

இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது கடைசி டி20 போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் அகமதாபாத் வந்து பயிற்சியை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், கடந்த போட்டியில் நியூசிலாந்து அணி 99 ரன்களில் சுருண்டதும், இந்தியா 101 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

இது குறித்து பேசிய இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா, “இந்த மைதானம் டி20 போட்டிக்கு உருவாக்கப்படுவதே கிடையாது. கடினமான மைதானமாக இருந்தாலும் சரி, எளிதான மைதானமாக இருந்தாலும் விளையாடுவது எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால், மைதானத்தை உருவாக்குபவர்கள் தவறு செய்துவிட்டனர். அவர்கள் மைதானத்தை முன் கூட்டியே தயார் செய்திருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லக்னோ மைதானத்தில் கருப்பு மண் இருந்துள்ளது. இது வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். ஆனால், போட்டி நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்னர், மைதானம் வடிவமைப்பாளரை அழைத்த இந்திய அணி நிர்வாகம், மைதானத்தை ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும்படி சிவப்பு மண் மைதானத்தை உருவாக்குமாறு கேட்டுள்ளனர்.

அதன்படியே சிவப்பு நிற மண் கொண்டு மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் வகையில் மாற்றியுள்ளனர். இது தற்போது சர்ச்சையானதைத் தொடர்ந்து மைதானம் உருவாக்கும் அதிகாரியை பிசிசிஐ அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடக்க உள்ள நிலையில், மைதானம் எப்படி இருக்குமோ என்று பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News