இந்த வருடம் இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 13ஆவது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகின்ற காரணத்தினால் தொடரில் சுழற் பந்துவீச்சாளர்கள் முக்கியமான இடத்தை பெறுவார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இதை வைத்து எல்லா அணிகளும் தங்களது தயாரிப்புகளை மேற்கொண்டு வருகின்றன.

Advertisement

எனவே சொந்த நாட்டில் விளையாடுவதாலும் சுழற் பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாட முடியும் என்பதாலும், சிறந்த சுழற் பந்துவீச்சாளர்களை அணியில் வைத்திருக்கின்ற காரணத்தினாலும் இந்திய அணிக்கு கூடுதல் நன்மை இருப்பதாக கணிக்கப்படுகிறது. அதே சமயத்தில் இந்தியாவில் உலகக்கோப்பை நடப்பது இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில் அதிகப்படியாக கலந்து கொண்டு விளையாடும் வீரர்களின் தயாரிப்புகளிலும் இது முக்கிய பங்கு வகிக்கும் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்து இருக்கிறார்.

Advertisement

இதுகுறித்து பேசிய மேத்யூ ஹைடன், “ஐபிஎல் நிச்சயமாக வெளிநாட்டு வீரர்களின் உலக கோப்பைக்கான தயாரிப்புகளில் உதவி செய்யும் என்று நான் உறுதியாக கூறுகிறேன். ஆனால் இதுவே முழுமையான காரணியாக இருக்க முடியாது. ஏனென்றால் அந்தந்த நாளின் நிலைமைகள் வித்தியாசமாக இருக்கும். அதற்கேற்றபடி விளையாடுவது என்பது மிகவும் முக்கியமானது. இந்த உலகக் கோப்பையில் முக்கியமான காரணியாக சுழற் பந்துவீச்சு இருக்கும் என்று நான் நினைக்கிறேன். 

நீங்கள் இந்தியாவிற்கு வரும்பொழுதெல்லாம் உங்கள் அணியில் சிறந்த சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்க வேண்டும். அதேபோல் சுழற் பந்துவீச்சுக்கு எதிராக திறமையாக விளையாடும் பேட்ஸ்மேன்களும் இருக்க வேண்டும் இது இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு கூடுதல் சாதகத்தை வழங்குகிறது. அவர்கள் இந்த நிலைமைகளில் சிறந்த சுழற் பந்துவீச்சாளர்களையும் சுழற் பந்துவீச்சுக்கு எதிராக விளையாடும் நல்ல பேட்ஸ்மேன்களையும் வைத்திருக்கிறார்கள். 

ஆஸ்திரேலியாவிலும் இளம் ஆடம் ஜாம்பா இருக்கிறார். அவர் இந்த நிலைமைகளில் நன்றாக விளையாடியுள்ளார். இது முக்கியமானது.இதேபோல் 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் மிகச் சிறந்த சுழற் பந்துவீச்சாளர் வார்னே விளையாடவில்லை. அந்த உலகக் கோப்பையில் இளம் பிராட் ஹாக் வெளியில் வந்தார். இதுபோல வெளியில் பெரிய அளவில் அறியப்படாத வீரர்களும் இந்தத் தொடரில் சிறப்பாக செயல்படலாம்” என்று கூறியுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News