சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக இருந்து வரும் தீபக் சஹர் கடந்த ஆண்டு முழுவதும் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். ஓரிரு போட்டிகள் தவிர மற்ற போட்டிகள் அனைத்திலும் இவர் விளையாடவில்லை. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டு கிரிக்கெட்டில் இருந்து வெளியேறினார். ஆசியகோப்பை முடிந்தபின் நடந்த போட்டிகளில் மீண்டும் விளையாடினார். பும்ரா இல்லாததால் டி20 உலககோப்பை இந்திய அணியிலும் இடம் பிடித்தார்.

Advertisement

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது மீண்டும் காயம் ஏற்பட்டு முதுகு பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கடந்த டிசம்பர் மாதம் வங்கதேசம் அணிக்கு எதிரான தொடருக்கு திரும்பிய தீபக் சஹர் மூன்றாம் நிலை ஜவ்வு கிழிந்து கிரிக்கெட்டில் இருந்து மீண்டும் சில காலம் வெளியேறும்படி நிர்பந்திக்கப்பட்டார்.

Advertisement

இதனால் கடந்த ஆண்டு ஐபிஎல், ஆசியகோப்பை, டி20 உலககோப்பை என மிகப்பெரிய தொடர்கள் எதிலும் இவர் விளையாட முடியவில்லை. அதிலிருந்து குணமடைந்து இந்த சீசன் சிஎஸ்கே அணிக்காக மீண்டும் பந்துவீசுவதற்கு வந்திருக்கிறார்.இந்த சீசனின் முதல் போட்டியில் 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இவரது பந்துவீச்சு படுமோசமாக இருந்தது. நான்கு ஓவர்களில் 55 ரன்கள் விட்டுக்கொடுத்தார். நிறைய ஒயிடுகள் வீசினார். இவர் மீது கேப்டன் தோனி கோபம் அடைந்ததையும் பார்க்க முடிந்தது. போட்டி முடிந்த பிறகு காயம் குறித்தும், அதனால் இயல்பான பந்துவீச்சை வெளிப்படுத்த முடியாதது குறித்தும் வருத்தத்துடன் பேசி இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர், “காயத்திலிருந்து குணமடைந்துவிட்டாலும் மனதளவில் அதிலிருந்து வெளியே வருவது மிகவும் கடினம். கடந்த ஆண்டு எனக்கு இரண்டு மேஜர் இஞ்சுரிகள் ஏற்பட்டது. குறிப்பாக முதுகு பகுதியில் எலும்பு முறிவும் ஏற்பட்டது. வேகப்பந்துவீச்சாளருக்கு எப்படி நேர்ந்தால் அதைவிட மிகப்பெரிய வலி எதுவும் இருக்கமுடியாது. அதிலிருந்து குணமடைந்துவிட்டாலும் உடல் அளவில் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறேன். சிறிது காலம் மீண்டு வருவதற்கு எடுக்கும். அதேபோல் மனதளவிலும் இதிலிருந்து மீண்டு வருவது சற்று கடினமாகவே இருக்கிறது. விரைவில் மீண்டு வருவேன்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News