ஆஸ்திரேலிவில் புகழ்பெற்ற பிக் பேஷ் லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் புத்தாண்டு தினமான இன்று நடைபெற்ற போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் ஆடிய பிரிஸ்பேன் ஹீட் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 224 ரன்கள் குவித்தது. 

Advertisement

இதனைத் தொடர்ந்து விளையாடிய சிட்னி சிக்சர்ஸ் அணி இறுதி வரை போராடி 29 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது . இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. மேலும் இது பிரிஸ்பேன் அணியினர் பெறும் இரண்டாவது வெற்றி ஆகும் .

Advertisement

இந்நிலையில் இந்த ஆட்டத்தின் 19ஆஅவது ஓவரில் நடைபெற்ற ஒரு சம்பவம் கிரிக்கெட் அரங்கில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. 12 பந்துகளுக்கு 33 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பிரிஸ்பேன் ஹீட் அணியின் மார்க் ஸ்டிக்கிடி வீசிய முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசினார் ஜோர்டான் சில்க்.

பந்து எல்லைக் கோட்டின் அருகே உயர்ந்து சிக்ஸருக்கு செல்வது போலவே சென்றது. ஆனால் எல்லை கோட்டின் அருகில் இருந்த பிரிஸ்பேன் ஹீட் அணி வீரர் மைக்கேல் நாசர் பந்தினை பிடித்தார் . அப்போது அவரது பேலன்ஸ் அவரை எல்லை கோட்டிற்கு வெளியே இழுத்ததால் லாவகமாக கையில் வைத்திருந்த பந்தை மைதானத்திற்குள் வீசிவிட்டு இவர் எல்லை கோட்டை தாண்டி சென்று மறுபடியும் வந்து கேட்ச் பிடித்தார் . இது மூன்றாம் நடுவர்களின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது .

நடுவர்கள் ரீப்ளே செய்து பார்த்ததில் அவர் வீசிய பந்தானது அவர் எல்லைக் கோட்டிற்கு வெளியே இருந்து பந்தை மறுபடியும் ஆடுகளத்திற்குள் வீசிவிட்டு வந்து பிடித்ததாக அவுட் கொடுத்தனர். ஆனால் மற்ற சில கோணங்களில் பார்க்கும் பொழுது அவர் எல்லைக் கோட்டை தாண்டி பந்தை கேட்ச் பிடித்து விட்டு காலை எல்லை கோட்டிற்கு அப்பால் வைத்தது போல் இருந்தது . 

 

Advertisement

இதனால் இந்த கேட்ச் கிரிக்கெட்டின் ஒரு அற்புதமான கேட்ச் ஆகவும் அதே நேரம் ஒரு சர்ச்சைக்குரிய கேட்ச் ஆகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இக்கேட்ச் குறித்தான காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இது கேட்சா? அல்லது அவுட்டா? என்ற கேள்களும் ரசிகர்கள் மத்தில் ஆர்வத்தை தூண்டி வருவது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News