இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் மொயின் அலி. இவர் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்காக 64 போட்டிகளில் 2914 ரன்கள், 195 விக்கெட்களை வீழ்த்தி, பெஸ்ட் டெஸ்ட் ஆல்-ரவுண்டராக வலம் வந்த 34 வயதாகும் மொயின் அலி, கடந்த செம்படம்பர் மாதத்தில் திடீரென்று டெஸ்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

Advertisement

இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது அப்போதைய கேப்டன் ஜோ ரூட்தான். மொயின் அலிக்கு உரிய மரியாதையை தராததால்தான் ஓய்வினை அறிவித்தார் என பலரும் விமர்சனங்களை அடுக்கினார்கள். ஆனால், மொயின் அலி இதற்கு பதிலளிக்காமலே இருந்தார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால், மொயின் அலி மீண்டும் அணிக்கு திரும்புவார் என கூறப்பட்டது. இறுதியில் அதேபோல் ஓய்வினை வாபஸ் வாங்கியுள்ளார். இந்நிலையில், ஓய்வினை வாபஸ் வாங்கியதற்கான காரணத்தை மொயின் அலி விளக்கியுள்ளார்.

இதுகுறித்து தனியார் பத்திரிகைக்கு பேட்டிகொடுத்த அவர், ‘‘இந்த வருடம் பாகிஸ்தான் சென்று இங்கிலாந்து அணி டெஸ்ட் விளையாட உள்ளது குறித்து தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம், என்னுடன் உரையாடினார். அப்போது, ‘நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அணிக்கு திரும்பலாம். வரவேற்க காத்திருக்கிறோம். நீங்கள் வந்துதான் ஆக வேண்டும்’ என மெக்கல்லம் கூறினார். அவரிடம் முடியாது எனக் கூறுவது கஷ்டமான விஷயம்.

ஆம், தற்போது நான் ஓய்வு அறிவிப்பை திரும்ப பெறுகிறேன். பென் ஸ்டோக்ஸ் தலைமையில் விளையாட ஆவலோடு காத்திருக்கிறேன். மெக்கல்லம், பென் ஸ்டோக்ஸ் இருவரும் அதிரடியாக செயல்படக் கூடியவர்கள். நிச்சயம், அணியை உயரத்திற்குக் கொண்டு செல்வார்கள் என நம்புகிறேன்’’ என்று தெரிவித்தார்.

இங்கிலாந்து அணி, அடுத்து பாகிஸ்தான் சென்று டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. அத்தொடருக்கான அணியில் மொயின் அலியின் பெயர் நிச்சயம் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News