2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியாகியது முதலே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மகளிர் பிரீமியர் லீக் தொடர் மார்ச் 26ஆம் தேதி முடிவடையும் நிலையில் நான்கு நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஆடவர் ஐபிஎல் தொடர் தொடங்குகிறது. ஆடவர் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 31ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இந்த முறை முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியன் ஆன குஜராத் டைட்டன்ஸ் அணியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் எதிர்கொள்கிறது. சென்னை அணியின் கேப்டன் தோனியின் கடைசி ஐபிஎல் சீசன் என்பதால், ரசிகர்கள் மத்தியில் ஐபிஎல் தொடருக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கிட்டத்தட்ட 40 வயதை எட்டிவிட்ட தோனி, மைதானத்தில் எப்படி செயல்படுவார், அவரின் கேப்டன்சி எப்படி இருக்கும் என்று பல கேள்விகள் ரசிகர்களின் நெஞ்சங்களில் நிறைந்துள்ளது.

Advertisement

அதைக் கடந்து கடைசியாக சென்னையின் நாயகனை ஒரு முறை களத்தில் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்துள்ளனர். அதேபோல் கடைசி முறை தோனி சிரிப்புடனும், கோப்பையுடனும் வழியனுப்பி வைக்க வேண்டும் என்று சென்னை அணியின் வீரர்களும் பேசி வருகின்றனர். ஏனென்றால் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கு பின் தோனி இந்திய அணிக்காக களமிறங்கவில்லை. அதன் பின்னர் கரோனா வைரஸ் பரவலின் போது, சுதந்திர தினத்தின்று ஓய்வை அறிவித்தார். இருப்பினும் தனது கடைசி ஐபிஎல் போட்டி சென்னையில் தான் இருக்கும் என்று தோனி வெளிப்படையாக அறிவித்தார்.

சரியான அணியையும் கட்டமைத்துள்ள தோனி, கடைசி முறையாக தனது ஆட்டத்தை களத்தில் காட்ட சென்னையில் களமிறங்கியுள்ளார். சென்னை அணியின் பயிற்சி முகாம் தொடங்கியுள்ள நிலையில், அதில் கலந்துகொள்வதற்காக சிஎஸ்கே கேப்டன் தோனி சென்னை வந்துள்ளார். ஏற்கனவே ராயுடு, தீபக் சஹார், ரஹானே ஆகியோர் சென்னையில் பயிற்சியை தொடங்கியுள்ளனர். அவர்களோடு இளம் வீரர்களும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சூழலில் கேப்டன் தோனியின் பயிற்சிக்காக சென்னை வந்துள்ளார். இதனால் சென்னை அணி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஏனென்றால் கடந்த முறை சென்னையில் தோனி பயிற்சி மேற்கொண்ட போது, ரசிகர்கள் பயிற்சி ஆட்டத்தை காண்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். அதனால் இன்னும் சில நாட்களில் ரசிகர்கள் முன்னிலையில் தோனி பயிற்சிக்காக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News