மீண்டும் பினீஷர் என்பதை நிரூபித்த தோனி; வைரல் காணொளி! 

Updated: Sun, Apr 30 2023 17:50 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 41ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்று முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது.

இப்போட்டியில் அபாரமாக விளையாடிய தொடக்க  வீரர் டெவான் கான்வே 52 பந்துகளில் 16 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 92 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரைத் தவிர்த்து ருதுராஜ் கெய்க்வாட் 37 ரன்கள், ஷிவம் துபே 28 ரன்கள், மொயீன் அலி 10 ரன்கள், ஜடேஜா 12 ரன்கள் எடுத்தனர். 

அதிலும் கடைசி ஓவரில் களமிறங்கிய கேப்டன் எம் எஸ் தோனிதனக்கே உரித்தான பாணியில் கடைசி இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டு ஆட்டத்தை முடித்து வைத்தார். அவர் 4 பந்துகளில் 2 சிக்சர் உள்பட 13 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் கடைசி ஓவரில் மட்டும் 59 சிக்சர்களை விளாசி சாதனையையும் படைத்துள்ளார். 

 

இந்நிலையில் கடைசி ஓவரில் மகேந்திர சிங் தோனி அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை பறக்கவிட்ட காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை