சையத் முஷ்டாக் அலி: தமிழக அணியில் முரளி விஜய் இடம்பெறாததன் காரணம் இதுதான்!

Updated: Sat, Nov 13 2021 13:15 IST
Murali Vijay Not Considered For Mushtaq Ali Trophy After Refusal to Take Vaccine: Report (Image Source: Google)

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் தமிழக அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் தமிழக அணியில் நட்சத்திர வீரர் முரளி விஜய் இடம்பெறாமல் இருப்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், போட்டி தொடங்குவதற்கு முன்பு ஒருவாரம் கரோனா தடுப்பு வளையத்தில் இருக்க வேண்டும் போன்ற விதிமுறைகளை பிசிசிஐ வகுத்துள்ளது. 

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் ஒரு வாரத்துக்கு முன்பு கரோனா தடுப்பு வளையத்தில் இருக்கவும் விருப்பம் இல்லாததால் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் முரளி விஜய்யால் பங்கேற்க முடியவில்லை என்கிற தகவல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. எனினும் முரள் விஜய் தரப்பில் இதுகுறித்து விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. 

Also Read: T20 World Cup 2021

கடந்த வருட ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார் முரளி விஜய். அதன்பிறகு அவர் வேறு எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இந்த வருட டிஎன்பிஎல் போட்டியிலிருந்தும் விலகினார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் டிவிஷன் லீக் போட்டியிலும் அவர் விளையாடாததால் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டிக்கு முரளி விஜய்யைத் தேர்வு செய்வதில் தமிழகத் தேர்வுக்குழுவினர் ஆர்வம் செலுத்தவில்லை எனத் தெரிகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை