விஜய் ஹசாரே கோப்பை: யாரும் செய்திடாத உலக சாதனை நிகழ்த்திய நாரயண் ஜெகதீசன்!

Updated: Mon, Nov 21 2022 11:31 IST
Image Source: Google

இந்தியாவின் பிரபல உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 6ஆவது சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு - அருணாச்சலபிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 

இப்போட்டியில் டாஸ் வென்ற அருணாச்சல பிரதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து தமிழ்நாடு அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி இந்த சீசன் முழுவது தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரன்களை குவித்து வரும் தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் நாராயன் ஜெகதீசன் - சாய் சுதர்சன் இணை இன்றும் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

அதிலும் இந்த சீசனில் அடுத்தடுத்து 4 சதங்களை விளாசியிருந்த ஜெகதீசன் இன்றும் தனது ருத்ரதாண்டவத்தை தொடர்ந்தார். அவருக்கு துணையாக சாய் சுதர்சனும் அதிரடியில் மிரட்ட அணியின் ஸ்கோரும் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் இப்போட்டியில் சதமடித்து எதிரணி பந்துவீச்சாளர்களை திக்குமுக்காடவைத்து வருகின்றனர்.

இப்போட்டியிலும் நாராயன் ஜெகதீசன் சதமடித்ததன் மூலம் விஜய் ஹசாரே கோப்பை தொடர் வரலாற்றில் தொடர்ச்சியாக ஐந்து சதங்களை விளாசிய முதல் வீரர் எனும் வரலாற்று சாதனையைப் பதிவுசெய்தததுடன், உலகலாவிய முதல் தர கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக ஐந்து சதங்களை விளாசிய ஒரே வீரர் எனும் மாபெரும் இமாலய சாதனைப் படைத்துள்ளார். 

முன்னதாக ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து நாராயன் ஜெகதீசன் விடுவிக்கப்பட்டார். இதனால் வரும் டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறும் ஐபிஎல் மினி ஏலத்தில் மிகப்பெரும் தொகைக்கு நாராயன் ஜெதீசன் வாங்கப்படுவார் என்பதில் சந்தேகமில்லை.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை