அக்டோபர் 17-ல் ஐபிஎல் மெகா ஏலம்- தகவல்!

Updated: Tue, Sep 14 2021 14:47 IST
New IPL team auction likely on October 17 through sealed covers (Image Source: Google)

கரோனா தொற்று காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர், தற்போது மீண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இந்நிலையில், அடுத்தாண்டிற்காக ஐபிஎல் தொடர் குறித்து எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தில் தற்போதிலிருந்தே பெரும் ஆர்வத்தை கிளப்பி வருகிறது. 

காரணம் அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் கூடுதலாக இரு அணிகள் இணைக்கப்பட்டு, மெகா ஏலம் நடைபெறவுள்ளதால் தான். இதனால் ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை மட்டும் தக்கவைத்துக் கொண்டு, பிற வீரர்களை வெளியேற்ற வேண்டும்.

இதன் காரணமாக பல நட்சத்திர வீரர்களை எந்தெந்த அணிகள் ஒப்பந்தம் செய்யப்போகின்றன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இந்நிலையில் ஐபிஎல் 2022ஆம் ஆண்டிற்கான வீரர்கள் மெகா ஏலம் வருகிற அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறும் என்று தகவல் வெளியுள்ளது. அக்டோபர் 15ஆம் தேதியுடன் ஐபிஎல் தொடர் முடிவடைவதால், அடுத்த இரண்டு நாள்களில் வீரர்கள் ஏலம் நடைபெறும் என பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை