எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிவிக்கு வந்துவிட்டது - காலின் முன்ரோ!

Updated: Tue, Aug 10 2021 15:27 IST
Image Source: Google

டி20 உலகக் கோப்பையில் விளையாடவுள்ள நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேன் வில்லியம்சன் தலைமையிலான அணியில் மூத்த வீரர் ராஸ் டெய்லர் நீக்கப்பட்டுள்ளார். அதிரடி வீரர் காலின் முன்ரோ,காலின் டி கிராண்ட்ஹோம், ஃபின் ஆலன் ஆகியோருக்கும் அணியில் இடமளிக்கப்படவில்லை.

இந்நிலையில், டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற எண்ணினேன். வாய்ப்பு கிடைக்காததில் வேதனையில் உள்ளேன். நியூசிலாந்து அணிக்காக என்னுடைய கடைசி ஆட்டத்தை விளையாடி விட்டதாக நினைக்கிறேன் என்று இன்ஸ்டகிராமில் மன்றோ கூறியுள்ளார். 

நியூசிலாந்து அணிக்காக ஒரு டெஸ்ட், 57 ஒருநாள், 65 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் அதிரடி ஆட்டத்துக்குப் புகழ் பெற்ற மன்றோ. நியூசிலாந்து அணிக்காக கடைசியாக பிப்ரவரி 2020-ல் டி20 ஆட்டத்தில் விளையாடினார். கடந்த வருடம் ஒப்பந்தத்திலும் அவர் பெயர் இடம்பெறவில்லை. பிஎஸ்எல், சிபிஎல், பிபிஎல், தி ஹண்ட்ரெட் என லீக் கிரிக்கெட் போட்டிகளில் கடந்த சில வருடங்களாக மன்றோ சிறப்பாக விளையாடி வருகிறார். 

வங்கதேசம், பாகிஸ்தானுக்கு எதிரான தொடர்களில் இடம்பெறவில்லை. சமீபகாலமாக கான்வே, கிளென் பிலிப்ஸ், டிம் சைஃபர்ட், மார்க் சாப்மேன் ஆகிய வீரர்கள் நியூசிலாந்து அணியில் நன்கு விளையாடி வருவதால் காலின் முன்ரோவுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. 

நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டட் கூறுகையில் “லின் சமீபத்திய சுற்றுப்பயணங்களில் இடம்பெறவில்லை. அதை வைத்து முடிவெடுக்க வேண்டியிருந்தது. கடந்த ஆறு மாதங்களில் பல வீரர்கள் நன்கு விளையாடியுள்ளார்கள். காலின் அற்புதமான வீரர் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் எங்களால் 15 பேரை மட்டும்தான் தேர்வு செய்ய முடிகிறது. காலினிடம் ஒரு வாரத்துக்கு முன்பே பேசினேன். தன்னுடைய நிலை பற்றி அவர் நன்கு அறிந்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை