அடுத்த மாதம் இறுதியில் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்திய அணி சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை 2022 தொடரில் சிறப்பாக செயல்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் பந்து வீச்சில் சொதப்பியதுதான் எனக் கூறப்படுகிறது. இன்னொரு காரணமும் இருக்கிறது. அது, உறுதியான பிளேயிங் லெவன் அணி இல்லாததுதான்.

Advertisement

இப்படி உறுதியான பிளேயிங் லெவன் அணி இல்லாததற்கு முக்கிய காரணம் தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் ஆகியோர்தான். ஒரு இடத்திற்கு இரண்டு பேரும் போட்டி போடுகின்றனர். இருவரும் திறமையானவர்கள். இதனால், ஒவ்வொரு போட்டியிலும் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற நிலை ஆசியக் கோப்பையில் இருந்தது. இப்படி உறுதியான பிளேயிங் லெவல் அணி இல்லாதது, அணி முழுமையாக தயாராக இல்லை என்பதையும் வெளிகாட்டியது.

Advertisement

இதனால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருவரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் இருவருக்குமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீண்டும் பிளேயிங் லெவன் சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், பலர் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள முன்னாள் வீரர் கௌதம் கம்பீரிடம், பிளேயிங் லெவலில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் இருவரில் யாருக்கு வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த கம்பீர், ‘‘ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் இருவரையும் ஒரே அணியில் விளையாட வைக்க முடியாது. அப்படி நடந்தால் 6ஆவது பௌலர் இல்லாமல்தான் களமிறங்க வேண்டிய நிலை ஏற்படும். இல்லையென்றால் கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ் இருவரில் ஒருவரை நீக்கிவிட்டுதான் ரிஷப், தினேஷ் கார்த்திக் ஆகியோரை சேர்க்க முடியும்.

ஒருவருக்கு வாய்ப்பு என வந்தால் ரிஷப் பந்தைத்தான் சேர்க்க வேண்டும். ஏனென்றால், டாப் ஆர்டரில் விளையாட வேண்டிய தேவை கட்டாயம் இருந்தாலும் கூட தினேஷ் கார்த்திக் அதற்கு சரிபட்டு வரமாட்டார். ரிஷப் பந்த் அதற்கு முழு தகுதியானவர். ஓபனிங், மிடில் வரிசை, லோயர் ஆர்டர் என அனைத்து இடத்திலும் அவரால் விளையாட முடியும். அதற்கான நம்பிக்கை அவரிடம் இருக்கிறது. அதனை பந்திடம் நான் பார்த்தேன். எனவே இவருக்குத்தான் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.

Advertisement

இந்திய அணியில் தற்போது டாப் ஆர்டர் மிகவும் வலுவாகத்தான் இருக்கிறது. அப்படியிருக்கும்போது மிடில் வரிசை வீரர் எதற்கு டாப் ஆர்டரில் களமிறங்க வேண்டும்? அப்படி நடந்தால் அதற்கு காரணமான டாப் ஆர்டர் பேட்டர்களைத்தானை விமர்சிக்க வேண்டும் என கம்பீரை ரசிகர்கள் விளாசி வருகிறார்கள்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News