தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியில் ஸாக் கிரௌலி மற்றும் டாம் அபெல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் டாம் அபெல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதில் டாம் அபெல் 57 ரன்களையும், ஸாக் கிரௌலி 38 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழகாமல் இருந்த மார்கோ ஜான்சன் 36 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர்.

Advertisement

இதன்மூலம் ஈஸ்டர்ன் கேப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களைச் சேர்த்தது. சூப்பர் ஜெயண்ட்ஸ் தரப்பில் நூர் அஹ்மத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தான்ர். இதில் அதிகபட்சமாகவே பிரைஸ் போர்சன்ஸ் 23 ரன்களை சேர்த்தது தான். 

இதனால் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஈஸ்டர்ன் கேப் தரப்பில் ரிச்சர்ட் கிளீசன், ஓட்னியல் பார்ட்மேன் மற்றும் லியாம் டௌசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி நடப்பு சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தோல்வியைத் தழுவினாலும் அந்த அணி வீரர் நூர் அஹ்மத் தனது அபாரமான பந்துவீச்சு காரணமாக இப்போட்டியின் ஆட்டநாயகன விருதை வென்றார். அதன்படி இப்போட்டியில் 4 ஓவர்களை வீசிய நூர் அஹ்மத் 25 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் நூர் அஹ்மத் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News