களத்தில் தைரியம் இல்லை - விராட் கோலி விளாசல்!

Updated: Mon, Nov 01 2021 11:24 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 110 ரன்களை இலக்காக நிர்ணயிக்க, அதனை 14.3 ஓவர்களிலேயே நியூசிலாந்து அணி எட்டி அசத்தியது. 

இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய கேப்ட்ன் விராட் கோலி பீல்டிங்குக்கு களம் இறங்கிய போது வீரர்களிடம் போதுமான உத்வேகம், துணிச்சல் இல்லை என தெரிவித்துள்ளார்.

தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், “பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நாங்கள் போதுமான அளவுக்கு தைரியமாக செயல்படவில்லை. இதே போல் பீல்டிங்குக்கு களம் இறங்கிய போது வீரர்களிடம் போதுமான உத்வேகம், துணிச்சல் 

Also Read: T20 World Cup 2021

இல்லை. ஆனால் எங்களை விட நியூசிலாந்து வீரர்கள் தீவிரத்துடன் செயல்பட்டனர். இந்திய அணிக்காக விளையாடும் போது நிறைய எதிர்பார்ப்புகள், நெருக்கடிகள் எப்போதும் இருக்கும். அதை சமாளித்து தான் விளையாட வேண்டும்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை