டி20 உலகக் கோப்பை தொடர் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்தது.இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் அபாரமாக செயல்பட்டு அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், அடுத்து அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக படுமோசமாக சொதப்பி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்றது.

Advertisement

இதனைத் தொடர்ந்து இந்திய அணி நியூசிலாந்து சென்றுள்ளது. அங்கு இளம் இந்திய அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், ஒருநாள் தொடர்களில் பங்கேற்க உள்ளது.இத்தொடரின் முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்தான நிலையில், இரண்டாவது போட்டி பே ஓவலில் இன்று தொடங்கியது. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச தீர்மானித்து, இந்திய அணியைப் பேட்டிங் செய்ய அழைத்தார். மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கு இடமளிக்காதது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷான் - ரிஷப் பந்த் இணை களமிறங்கினர். தொடக்கத்திலேயே இந்த இணை எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அதன்பின் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரிஷப் பந்த் ஆட்டமிழந்து தனக்கான வாய்ப்பை வீணடித்தார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த இஷான் கிஷான் - சூர்யகுமார் யாதவ் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷான் 31 பந்துகளில் 36 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் 13 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

இருப்பினும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் தனது இரண்டாவது சர்வதேச டி20 சதத்தை பதிவுசெய்து மிரட்டினார். அத்துடன் நிறுத்தாமால் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் 51 பந்துகளில் 7 சிக்சர், 11 பவுண்டரிகள் என 111 ரன்களை குவித்தார். 

Advertisement

அதன்பின் கடைசி ஓவரில் கேப்டன் ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அந்த ஓவரை வீசிய டிம் சௌதீ சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை பதிவுசெய்து அசத்தினார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழப்பிற்கு 191 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் சூர்யகுமார் யாதவ் 111 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் டிம் சௌதீ ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News