ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் சோஃபி டிவைன்!

Updated: Tue, Jun 17 2025 13:08 IST
Image Source: Google

Sophie Devine Retirement: ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடருடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக நியூசிலாந்து கேப்டன் சோஃபி டெவின் அறிவித்துள்ளார்.

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெறவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தவுள்ளது. முன்னதாக இத்த்தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் இலங்கையில் உள்ள கொழும்புவிலும் சில போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் உலகக்கோப்பை தொடருக்கான மைதானங்களை சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், போட்டி அட்டவணையையும் ஐசிசி நேற்றைய தினம் வெளியிட்டது. அதன்படி பெங்களூருவில் நடைபெறும் முதல் போட்டியில் தொடரை நடத்தும் இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அதேசமயம் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி அக்டோபர் 5ஆம் தேதி கொழும்புவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசாமயம் அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து அணியின் கேப்டனும், அனுபவ வீராங்கனையுமான சோஃபி டிவைன் எதிர்வரும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

ஏனெனில் இத்தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பதற்கு முன்னரே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இருப்பினும் அவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக தொடர்வார் என்று கூறப்படுகிறது. கடந்த 2006ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்காக அறிமுகமான சோஃபி டிவைன் இதுநாள் வரையிலும் 152 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8 சதம், 16 அரைசதங்களுடன் 3990 ரன்களை சேர்த்துள்ளார். 

மேலும் நியூசிலாந்து அணிக்காக அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வீராங்கனைகள் பட்டியலில் டிவைன் இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் சூஸி பேட்ஸ் முதலிடத்தில் உள்ளார். இதுதவிர்த்து நியூசிலாந்து மகளிர் ஒருநாள் அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் நான்காம் இடத்திலும், நியூசிலாந்திற்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: LIVE Cricket Score

தனது ஓய்வு முடிவு குறித்து பேசிய டிவைன், "நான் ஓய்வு பெற இதுவே சரியான நேரம் என்று நினைக்கிறேன். நியூசிலாந்து கிரிக்கெட்டின் ஆதரவு எனக்கு கிடைத்திருப்பது மிகவும் அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன், அதுது அணிக்கு நான் இன்னும் ஏதாவது கொடுக்க முடியும் என்பதற்கான தீர்வைக் கண்டுபிடிக்க எனக்கு உதவியது. இந்த அணிக்கு எனது சிறந்ததை வழங்க நான் அர்ப்பணிப்புடன் இருக்கிறேன் என்பதை அனைவரும் அறிவது முக்கியம்." என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை