ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்குகிறது. வரும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை அங்கமாக நடைபெறும் இத்தொடருடன் நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Advertisement

இருப்பினும் 2018ஆம் ஆண்டு பந்து சேதப்படுத்தப்பட்ட வழக்கில் நாட்டுக்கு மிகப்பெரிய அவப்பெயரை வாங்கிக் கொடுத்த டேவிட் வார்னர் இப்படி ஹீரோவை போல விடை பெறுவதற்கு அனுமதி கொடுத்தது ஏன் என்று ஆஸ்திரேலிய வாரியத்தை முன்னாள் வீரர் மிட்சேல் ஜான்சன் கடுமையாக விமர்சித்தார். ஆனால் அதற்கு உஸ்மான் கவாஜா முதல் மைக்கேல் கிளார்க் வரை நிறைய முன்னாள் இந்நாள் ஆஸ்திரேலிய வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Advertisement

இந்நிலையில் கடந்த ஆஷஸ் தொடரில் டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்ட போது மனக்கசப்பு ஏற்பட்டதாலயே மிட்சேல் ஜான்சன் இப்படி பேசியிருக்கலாம் என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். எனவே இருவரையும் ஒன்றாக ஒரே அறையில் அமர வைத்து சமரசம் பேசினால் மட்டுமே இந்த சர்ச்சைகள் முடிவுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர, “இறுதியில் இந்த இருவருக்கு மத்தியில் நான் வரவேண்டும். அவர்களுக்கு மத்தியில் நான் நடுவராக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். அந்த நிகழ்வை ஊடகங்களில் ஒளிபரப்புவதற்கு பதிலாக அவர்களை ஒரு அறையில் அழைத்துச் சென்று பேச விரும்புகிறேன். ஏனெனில் இருவரும் தற்போது சற்று நெருப்பான வேகத்தில் இருக்கிறார்கள். 

என்னைப் பொறுத்த வரை இந்த பிரச்சினை கடந்த 6 முதல் 8 மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற ஆஷஸ் தொடரில் வார்னர் தேர்வு செய்யப்பட்டது சம்பந்தமாக உருவாகியிருக்கலாம் என்று கருதுகிறேன். நேரடியாக இருவரும் உட்கார்ந்து பேசாததாலேயே இந்த பிரச்சனை நீடிப்பதாக தோன்றுகிறது. எனவே அவர்கள் உரையாடல் நிகழ்த்துவதை பார்க்க நான் சாட்சியாக இருக்க வேண்டும்

“மேலும் வார்னர் தம்முடைய கடைசி போட்டி வழியனுப்பும் போட்டியாக இருக்கும் என்று சொல்லவில்லை. மாறாக பெர்த் நகரில் நடைபெறும் போட்டியில் சில ரன்கள் அடித்து தம்முடைய கேரியரை சிட்னியில் முடிப்பதற்கு அவர் விரும்புகிறார்” என்று கூறியுள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News