கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் பங்கச் சிங்!

Updated: Sat, Jul 10 2021 15:44 IST
Image Source: Google

இந்திய அணியின் முன்னாள் வீரரும், ராஜஸ்தான் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளருமாக திகழ்ந்தவர் பங்கச் சிங்.

இவர் இந்திய அணிக்காக 2 டெஸ்ட் போட்டிகள், ஒரு ஒருநாள் போட்டிகளிலும், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 17 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 

மேலும் 2004ஆம் ஆண்டு முதல் முதல் 117 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 472 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். தற்போது 36 வயதாகும் பங்கச் சிங், அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர்,“இது ஒரு எளிதான முடிவு அல்ல, இருப்பினும், ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையிலும் இப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டிய நேரம் வருகிறது. கனமான இதயத்துடனும், கலவையான உணர்ச்சிகளுடனும், எல்லா வகையான கிரிக்கெட்டிலிருந்தும் நான் ஓய்வு பெறுவதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை