ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் ஃபிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்றிரவு நடைபெற்ற மகளிர் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை குஸ்மானை வீழ்த்தி இறுதிசுற்றுக்கு முன்னேறி இருந்தார். மேலும், இறுதிப் போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்டை எதிர்த்து வினேஷ் போகத் இன்று விளையாட இருந்தார்.

Advertisement

இந்நிலையில், இப்போட்டிக்கு முன்னதாக நிர்ணயித்த அளவைவிட உடல் எடை 100 கிராம் எடை கூடியதன் காரணத்தால் பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியிலிருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் வினேஷ் போகத் மற்றும் இந்தியாவின் பதக்க கனவானது தகர்ந்துள்ளது. இந்நிலையில், வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் குறித்து அவர்கள் கால அவகாசம் எடுத்திருக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து பேசிய அவர், “வினேஷ் போகத்திற்கு நடந்த சம்பவம் எங்களுக்கு மிகவும் வருத்தமாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது. ஒருவேளை அவர் இப்போட்டியில் விளையாடி இருந்தால் நாங்கள் நிச்சயம் தங்கப்பதக்கத்தை வென்றிருப்போம். ஆனால் விதிகள் என்பது அனைவருக்கும் போதுவானது. அதனால் எங்களால் எதும் செய்ய முடியாது. அதேசமயம் ஒரு வீரர் இறுதிப்போட்டியில் விளையாட மிக அருகில் இருக்கும் போது, இதுபோன்ற ​​தீர்ப்பை வழங்க போட்டி அமைப்பாளர்கள் கூடுதல் நேரம் எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

எதுவாகினும் வினேஷ் போகத் இதுவரை முன்னேறியது ஒட்டுமொத்த இந்தியாவையும் ஊக்கமளிக்க செய்துள்ளது. ஏனெனில் உலக சாம்பியனும், டோக்கியோவில் தங்கப் பதக்கம் வென்றவருமான வீராங்கனையை தோற்கடிப்பது எளிதான காரியம் அல்ல, ஆனாலும் வினேஷ் போகத் அதைச் செய்துள்ளார். எனவே நான் வினேஷ் போகத்திற்க்கு எல்லா அதிர்ஷ்டங்களும் கிடைக்க வாழ்த்துகிறேன், மேலும் நான் அவளை நினைத்து உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News