சிபிஎல் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்ட பேட்ரியாட்ஸ் நட்சத்திர வீரர்!

Updated: Mon, Aug 30 2021 17:06 IST
Image Source: Google

சிபிஎல் தொடரின் நடப்பாண்டு சீசன் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. லீக் போட்டிகளிலேயே ரசிகர்களில் எதிர்பார்ப்பை இத்தொடர் நிறைவேற்றி வருவதால், நாளுக்கு நாள் இத்தொடரின் மீதான விறுவிறுப்பும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சிபிஎல் தொடரின் கரோனா பாதுகாப்பு சூழலை அனுமதியின்றி மீறியதாக செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியின் மைக்கேல் லூயிஸ், தொடரிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளார். 

மேலும் லூயிஸ், தனது நண்பர் குறித்து வந்த சோகமான செய்தியைக் கேட்டதும், எந்தவித அனுமதியும் இன்றி சிபிஎல் தொடரின் பயோ பபுள் விதியை மீறி விடுதியிலிருந்து வெளியேறியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. 

இதுகுறித்து சிபிஎல் நெறிமுறை குழு கூறுகையில், “சிபிஎல் தொடரின் பயோ பபுளில் எந்த வெளிநபரும் உள்ள வரக்கூடாது என்றும், அதேசமயம் பபுளில் உள்ளவர்களில் எக்காரணத்திற்காகவும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும். அப்படி விதிகளை மீறுபவர்கள் கட்டாயம், தொடரிலிருந்து வெளியேற்றப்படுவார்” என்று தேரிவித்துள்ளார். 

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் வெஸ்ட் இண்டீஸின் அண்டர் 19 அணிக்காக விளையாடிவரும் மைக்கேல் லூயிஸ், வெஸ்ட் இண்டீஸ் அணியில் கூடிய விரைவில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை