ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் நேற்றைய தினம் மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலமாக துவங்கியது. இந்த தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதுகின்றன.

Advertisement

நவிமும்பையில் உள்ள புகழ்பெற்ற டிஒய் பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெற்று ஐபிஎல் தொடரை வெற்றியுடன் துவங்குவதற்காக 2 அணிகளும் போராடும் என்பதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என நம்பலாம். 

Advertisement

பஞ்சாப் அணியை பொறுத்தவரை கடந்த வருடம் விளையாடிய கேஎல் ராகுல் விலகியதை அடுத்து அனுபவம் இல்லாத புதிய கேப்டன் மயங்க் அகர்வால் தலைமையில் இந்த ஐபிஎல் தொடரில் களமிறங்குகிறது. இதுநாள் வரை ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் அந்த அணி சமீப காலங்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்குக் கூட திண்டாடி வருகிறது. எனவே இந்த முறை மிக சிறப்பாக செயல்பட்டு குறைந்தபட்சம் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த அணி களமிறங்க உள்ளதால் பெங்களூருக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற போராட உள்ளது.

பஞ்சாப் அணியை போல கோப்பையை வெல்ல முடியாவிட்டாலும் சமீப காலங்களாக போராட்டங்களுக்கு பின் பிளே-ஆப் சுற்றுக்கு பெங்களூரு அணி தகுதி பெற்று வருகிறது. அந்த அணிக்கு 2013 முதல் 2021 வரை கேப்டன்ஷிப் செய்து வந்த நட்சத்திரம் விராட் கோலி அந்த அணிக்கு முதல் கோப்பையை வெல்ல எவ்வளவோ முயன்ற போதிலும் அந்த முயற்சி தோல்வி அடைந்ததால் கடந்த வருடம் கேப்டன் பதவியில் இருந்து விலகி சாதாரண வீரராக சுதந்திரமாக விளையாட உள்ளார். எனவே புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள டு பிளேஸிஸ் தலைமையில் முதல் கோப்பையை வெல்வதற்காக பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் போட்டியில் பெங்களூரு அணி முழு மூச்சுடன் விளையாடும் என நம்பலாம்.

பஞ்சாப் கிங்ஸ் அணி: மயங்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், ப்ரப்சிம்ரன் சிங் (கீப்பர்), லியம் லிவிங்ஸ்டன்*, ஷாருக்கான், ராஜ் பாவா, ஓடென் ஸ்மித்*, ரிஷி தவான், ராகுல் சஹர், ஹார்ப்ரீத் ப்ரார், அர்ஷிதீப் சிங்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி: விராட் கோலி, ஃபாஃப் டு பிளேஸிஸ்* (கேப்டன்), மஹிபால் லோமரர், பின் ஆலன்*, தினேஷ் கார்த்திக் (கீப்பர்), ஷாபின் ரூதர்போர்ட்*, வணிந்து ஹஸரங்கா*, சபாஸ் அஹமட், முகமது சிராஜ், சித்தார்த் கௌல், ஹர்ஷல் படேல். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News