பிஎஸ்எல் 2021: கராச்சி கிங்ஸ் அணிக்கு 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது முல்தான் சுல்தான்ஸ்!

Updated: Thu, Jun 10 2021 20:27 IST
Image Source: Google

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் பிஎஸ்எல் தொடரின் 16ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி, கராச்சி கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

இதையடுத்து முல்தான் சுல்தான்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் முகமது ரிஸ்வானுடன் ஜோடி சேர்ந்த சோயிப் மசூத் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

பின்னர் முகமது ரிஸ்வான் 29 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ப்து சோயிப் மசூத்தும் 31 ரன்களில் வெளியேறினார். அதன்பின் லிலே ரஸ்ஸோ அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 44 ரன்களைச் சேர்த்தார். 

அவர்களைத் தொடர்ந்து வந்த சிம்ரான் ஹெட்மையர் 7 ரன்களில் நடையைக் கட்டினார். இறுதியாக குஷ்டில் ஷா ஒரு சில பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 

இதனால் முல்தான் சுல்தான்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களைக் குவித்தது. இறுதியில் அதிரடியாக விளையாடிய குஷ்டில் ஷா 44 ரன்களைச் சேர்த்தார். கராச்சி கிங்ஸ் அணி தரப்பில் திசாரா பெரேரா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை