ஐபிஎல் தொடரை போலவே பாகிஸ்தானிலும் பிஎஸ்எல் தொடர் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்தாண்டுக்கான தொடர் நேற்று முல்தானில் உள்ள மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆனால் டாஸ் போடுவதற்கே நீண்ட நேரம் ரசிகர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது.

Advertisement

தொடக்க விழா என்பதால் பிரமாண்ட முறையில் வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அப்போது பட்டாசுகளை சரியாக கையாளததால் திடீரென மைதானத்தின் மின் விளக்குகள் மீது மோதி தீ பற்றி எறிந்தது. முதலில் சிறிய வெளிச்சம் போன்று இருந்ததை ரசிகர்களும், மைதான ஊழியர்களும் சகஜமாக எடுத்துக்கொண்டனர். ஆனால் பின்னர் தீ பரவத்தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

இதனையடுத்து உடனடியாக தீ அணைப்பு வாகனங்கள் மைதானத்திற்கு வெளியே கொண்டு வரப்பட்டு பணிகள் தொடங்கின. சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக தீ அணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் பின்னரே டாஸ் போடப்பட்டது. எனினும் ரசிகர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் செய்யப்படுவதை போன்றே பாகிஸ்தானும் ஒவ்வொரு ஆண்டும் செய்து வருகிறது. அதில் ஒரு விஷயம் தான் இந்த கலை நிகழ்ச்சிகள் மற்றும் வாண வேடிக்கைகள். ஆனால் அதனை சரியாக செய்யாமல் தொடக்க போட்டியையே தாமதமாக்கிவிட்டனர் என கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். நிகழ்ச்சி தான் பரபரப்புடன் நடந்தது என்றால், போட்டியும் பரபரப்புக்கு பஞ்சமின்றி நடந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 175 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய முல்தான்ஸ் அணியும் 6 விக்கெட்கள் இழப்புக்கு கிட்டத்த இலக்கை எட்டிவிட்டது. கடைசி பந்தில் 6 ரன்கள் தேவை என்ற சூழலில் 4 ரன்களை மட்டுமே அடித்ததால் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News