பிஎஸ்எல் 2024: கலந்தர்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது கிளாடியேட்டர்ஸ்!

Updated: Mon, Mar 11 2024 12:26 IST
பிஎஸ்எல் 2024: கலந்தர்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது கிளாடியேட்டர்ஸ்! (Image Source: Google)

பிஎஸ்எல் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் மற்றும் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. கராச்சி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லாகூர் கலந்தர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

இதையடுத்து களமிறங்கிய லாகூர் கலந்தர்ஸ் அணிக்கு ஃபர்ஹான் - மிர்ஸா தாஹிர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபர்ஹான் 25 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 12 ரன்களில் மிர்ஸா தாஹிரும் தனது விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஷாய் ஹோப்பும் 5 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

இதனையடுத்து ஜோடி சேர்ந்த அப்துல்லா ஷஃபிக் - ஷாஹீன் அஃப்ரிடி இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி அசத்தினர். இப்போட்டியில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தியதுடன், 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 

அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஷாஹீன் அஃப்ரிடி 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 55 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அப்துல்லா ஷஃபிக் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 59 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் லாகூர் கலந்தர்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களைச் சேர்த்தது.

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு ஜேசன் ராய் - சௌத் சகீல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜேசன் ராய் 18 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ரைலீ ரூஸோவும் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் சௌத் சகீலுடன் இணைந்த கவாஜா நஃபே இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சௌத் சகீல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் கவாஜா நஃபே 26 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய லௌரி எவனாஸும் 7 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். ஆனாலும் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சௌத் சகீல் 5 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 88 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

இதன்மூலம் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி பிஎஸ்எல் தொடரின் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்றது. அதேசமயம் கராச்சி கிங்ஸ் மற்றும் லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தவறவிட்டனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை