பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கராச்சியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் மற்றும் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணிக்கு டிம் செய்ஃபெர்ட் - கேப்டன் டேவிட் வார்னர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து சிறப்பான தொடக்கத்தை வழங்கிய நிலையில், டேவிட் வார்னர் 31 ரன்களிலும், டிம் செஃபெர்ட் 27 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆனால் அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய முகமது ரியாஸுல்லா 6 ரன்னிலும், குஷ்தில் ஷா ஒரு ரன்னிலும், இர்ஃபான் கான் 17 ரன்னிலும், முகமது நபி 18 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். 

Advertisement

அதேசமயம் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஜேம்ஸ் வின்ஸ் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தியதுடன் 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 70 ரன்களைச் சேர்த்தார். இதனமூலம் கராச்சி கிங்ஸ் அணியானது 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களைச் சேர்த்தது. கிளாடியேட்டர்ஸ் தரப்பில் முகமது அமீர், ஆலி மஜித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடியா குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் ஃபின் ஆலன் 6 ரன்னிலும், ஹசன் நவாஸ் ஒரு ரன்னிலும், குசால் மெண்டிஸ் 12 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.

அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய கவாஜா நஃபி, ரைலீ ரூஸோவ், ஃபஹீம் அஷ்ரஃப், சீன் அபோட் உள்ளிட்டோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அதன்பின் களமிறங்கிய முகமது அமீர் அதிரடியாக விளையாடி 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 30 ரன்களைச்  சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களை மட்டுமே சேர்த்தது. கராச்சி தரப்பில் ஹசன் அலி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் கராச்சி கிங்ஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News