பிஎஸ்எல் 2022: தோல்வியுடன் தொடரை முடித்தது கராச்சி கிங்ஸ்!

Updated: Sun, Feb 20 2022 20:10 IST
PSL: Karachi Kings end campaign with loss, suffer defeat against Quetta Gladiators (Image Source: Google)

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி ஜேசன் ராயின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஜேசன் ராய் 84 ரன்களைச் சேர்த்தார். 

இதையடுத்து இலக்கை துரத்திய கராச்சி கிங்ஸ் அணிக்கு ஜோ கிளார்க் - பாபர் அசாம் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.

இதில் கேப்டன் பாபர் ஆசாம் 36 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்த ஜோ கிளார்க் 52 ரன்களில் வெளியேறினார். அவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் கராச்சி கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமேச் சேர்த்தது. இதன்மூலம் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை