Jason roy
ஐபிஎல் தொடரிலிருந்து விலகியது ஏன்? காணரத்தை கூறிய ஜேசன் ராய்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்ட வருகிறது. அதன்படி வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய இத்தொடரில் தற்போது 25 போட்டிகள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியிலும் பல்வேறு சாதனைகளும் படைக்கப்பட்டு வருகின்றனா. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு போட்டியிலும் சராசரியாக 15 சிக்ஸர்கள் விளாசப்பட்டு வருவது ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது.
அந்தவகையில் நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தான் நைட் ரைடர்ஸ் அணி விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றி, ஒரு தோல்வியைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. அதிலும் குறிப்பாக அந்த அணியின் பேட்டர்கள் ஒவ்வொரு போட்டியிலும் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு தொடர்ந்து தலைவலியை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஜேசன் ராய் தொடரிலிருந்து விலகினார்.