விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 6ஆவது சுற்று ஆட்டத்தில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு பிரப்ஷிம்ரன் சிங் மற்றும் கேப்டன் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தி அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 196 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 7 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 93 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அதேசமயம் மறுமுனையில் அதிரடியைக் கைவிடாத பிரப்ஷிம்ரன் சிங் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 20 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 137 ரன்களைச் சேர்த்த நிலையில் பிரப்ஷிம்ரன் சிங்கும் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த அன்மோல்ப்ரீத் சிங் மற்றும் ரமந்தீப் சிங் ஆகியோரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அன்மோல்ப்ரீத் சிங் 46 ரன்களிலும், ரமந்தீப் சிங் 80 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நெஹல் வதேரா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 35 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். 

இதன்மூலம் பஞ்சாப் அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 426 ரன்களைக் குவித்தது. அதன்பின் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணியில் கே நிதிஷ் ரெட்டி ஒருபக்கம் அதிரடியாக விளையாடிய நிலையில் மறுமுனையில் களமிறங்கிய அரவெல்லி அவனிஷ் 19 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய கேப்டன் திலக் வர்மா 28 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் தொடக்க வீரராக களமிறங்கிய நிதிஷ் ரெட்டி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தனது சதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். 

பின்னர் 13 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 111 ரன்களை எடுத்திருந்த நிதிஷ் ரெட்டி தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் தனாய் தியாகராஜன் 74 ரன்களையும், அனிகேத் ரெட்டி 35 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் ஹைதராபாத் அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 346 ரன்களை மட்டுமே சேர்த்தது. பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளையும், ராகு சர்மா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் பஞ்சாப் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News