ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. இந்நிலையில் அரையிறுதிச்சுற்றுகு நியூசிலாந்து அணி முன்னேற தங்களது கடைசி லீக் போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. 

Advertisement

அந்த சூழ்நிலையில் இலங்கை அணிக்கெதிரான போட்டியில்டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ஆனால் அதை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 46.4 ஓவரில் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு துவக்க வீரர் குசால் பெரேரா அதிரடியாக 51, மஹீஷ் தீக்ஷனா 38 ரன்கள் எடுத்தார்கள்.மறுபுறம் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். 

Advertisement

அதை தொடர்ந்து 172 என்ற சுலபமான இலக்கை துரத்திய நியூசிலாந்துக்கு ஆரம்பத்திலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 23.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி நடப்பு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு ஏறத்தாழ உறுதிசெய்துள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 42 ரன்களைக் குவித்திருந்தார்.  இந்த 42 ரன்களையும் சேர்த்து 2023 உலகக் கோப்பையில் அவர் 565 ரன்களை அடித்துள்ளார். குறிப்பாக 23 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் தன்னுடைய இந்த முதல் உலக கோப்பையிலேயே அபாரமாக விளையாடி 565 ரன்களை அடித்துள்ளார்.

இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் தங்களுடைய அறிமுக தொடரிலேயே அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோவ் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2019 உலகக்கோப்பையில் ஜானி பேர்ஸ்டோ தன்னுடைய அறிமுகத் தொடரில் 532 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.

அதை விட உலகக் கோப்பை வரலாற்றில் 23 வயதுக்குள் ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் 27 வருட சாதனையையும் உடைத்த அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 1996 உலகக் கோப்பையில் சச்சின் தன்னுடைய 23 வயதுக்குள் 523 ரன்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும். அதனைத் தற்போது ரவீந்திரா முறியடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News